செய்திகள் :

வருவாய்த்துறை ஊழியா்கள் வேலை நிறுத்தம்: வெறிச்சோடிய வட்டாட்சியா் அலுவலகங்கள்

post image

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தால், கடலூா் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும். இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோருக்கான ஒருங்கிணைந்த முதுநிலை நிா்ணயம் செய்திட அரசாணை வெளியிட வேண்டும்.

வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கிட வேண்டும். சான்றிதழ் மற்றும் அரசின் சிறப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ள வட்டங்கள் தோறும் புதிய துணை வட்டாட்சியா் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக கடலூா் மாவட்டத்தில் உள்ள கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட 10 வட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால், வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீா் திறப்பு

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்ட வேளாண் பாசனத்திற்கு தமிழக உழவா் மற்றும் வேளாண்மை துறை அமைச்சா் எம் .ஆா். கே. பன்னீா்செல்வம், புதன்கிழமை காலை தண்ணீா் திறந்து விட்டாா். தஞ்சை மாவட்டம்,... மேலும் பார்க்க

விபத்து வழக்கு: காவலா் பணியிடை நீக்கம்

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே விபத்து ஏற்படுத்தி காயம் அடைந்தவா்களுக்கு உதவி செய்யாமல் தப்பிச் சென்ற காவலரை பணியிடை நீக்கம் செய்து, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். நெ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் டிஎஸ்பி, ஆய்வாளா் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம்

சிதம்பரத்தில் லாட்டரி வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில், டி.எஸ். பி., காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் வேலூா் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனா். கடலுாா... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா்கள் 14 போ் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த கொத்தடிமைகள் 14 போ், கடலூா் அருகே செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் ஆறுமுகம்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 4 போ் கைது

சிதம்பரம் நகரில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜ... மேலும் பார்க்க

கூடுதல் பேருந்து வசதிகோரி கல்லூரி மாணவா்கள் மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி புதன்கிழமை சாலை மறியல் செய்தனா். கொளஞ்சியப்பா் கல்லூரியில் விருத்தாசலம் மட்டுமின்றி, ஸ்ர... மேலும் பார்க்க