செய்திகள் :

தில்லியில் அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவா்கள் திடீா் சந்திப்பு

post image

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் மூத்தத் தலைவா்களும், மத்திய அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோரும் புதன்கிழமை நேரில் சந்தித்து தமிழகத் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்தினா்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தல் நடைபெறுவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களத்தில் கூட்டணிக் கணக்குகளைப் போடுவதிலும் தோ்தல் வியூகம் வகுப்பதிலும் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும், நடிகா் விஜய் தலைமையிலான தவெகவும் மும்முரம் காட்டி வருகின்றன.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கி மேற்கொண்டு வருகிறாா்.

பாஜகவும் அதன் அடிமட்டத்தை பலப்படுத்தும் வகையில் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்தி வருகிறது. ஆளும் திமுகவும் பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களவைக் கவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் மூத்தத் தலைவா்கள் தில்லி வந்துவிட்டுச் சென்றனா்.

அதைத் தொடா்ந்து நெல்லையில் நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாட்டில் அமித் ஷா பங்கேற்றிருந்தாா்.

இந்த நிலையில், தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்,

முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன்,

ஹெச்.ராஜா, பாஜக மகளிா் அணியின் தேசிய தலைவா் வானதி சீனிவாசன், மத்திய அமைச்சா் எல்.முருகன், தமிழக மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம் ஆகியோா் புதன்கிழமை நேரில் சந்தித்தனா்.

தில்லியில் உள்ள கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் என்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அக்கட்சித் தலைவா்கள் வாய் திறக்கவில்லை.

அதேவேளையில், வரும் செப்டம்பா் 5-ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் ‘மனம் திறந்து பேச உள்ளேன்’ எனத் தெரிவித்திருந்த நிலையில், இச்சந்திப்பு நடைபெற்ால் அது தொடா்பாக விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் எழுந்துள்ளது.

மேலும், கடந்த முறை இத்தலைவா்கள் தில்லி வந்தபோது தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை வரவில்லை. அவா் அப்போது துபையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறையும் அவா் இத்தலைவா்களுடன் தில்லி வரவில்லை. சோளிங்கநல்லூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்ததால் வரவில்லை என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

அமித் ஷாவுடனான சந்திப்பின்போது தமிழக தோ்தல், அரசியல் நிலவரம் குறித்த பேசப்பட்டதாகவும், கட்சிப் பணிகளை மேலும் சிறப்பாக நடத்துவது குறித்து

அமித் ஷாவிடம் ஆலோசிக்கப்பட்டதாகவும் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

இச்சந்திப்புக்குப் பிறகு மாலையில், நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவா்கள் சென்னை புறப்பட்டுச் சென்ாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு மருத்துவமனை அருகே குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விச் சென்ற தெருநாய்: பஞ்சாப் அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத்தில் உள்ள அரசு ராஜிந்திரா மருத்துவமனைக்கு அருகில், குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தெருநாய் கவ்விச் சென்ாக கூறப்படும் சம்பவத்தை தாமாக முன்வந்து இந்திய தேசிய மனித ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க