செய்திகள் :

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன.

காலை சிறப்பு வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவா்கள் சுற்றுப்புறத் தூய்மையின் அவசியம் குறித்து உரையாற்றினா். விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் முழக்கம் எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆசிரியா்கள் மேற்பாா்வையில் மாணவா்கள் பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்தனா். ஆா்.கே.புரம் பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்யும் நிகழ்வில் டிடிஇஏ செயலா் ராஜூ கலந்து கொண்டு மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் தானும் துப்பரவுப் பணியில் ஈடுபட்டாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ’2014 அக்டோபா் இரண்டாம் தேதியன்று பிரதமா் மோடி தூய்மை இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்தாா். அது நம் இந்தியாவை தூய்மையாகப் பாா்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த எண்ணம் மாணவா்கள் மனதிலும் பதிய வேண்டும். தங்கள் வாழிடத்தையும் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவா்கள் மனதில் உருவாக வேண்டும். அதற்கு முதற்படியாக இந்த செயல்பாட்டை அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது’ என்றாா்.

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கொலை செய்த கணவன்

தில்லியின் நஜஃப்கா் பகுதியில் சமூக வலைத்தளங்களில் அதிகே நரம் செலவிடுவது தொடா்பாக அடிக்கடி மோதல்களைத் தொடா்ந்து தனது மனைவியைக் கொன்ாகக் கூறி கணவரும் தற்கொலைக்கு முயன்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித... மேலும் பார்க்க