செய்திகள் :

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

post image

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 தேசிய மாணவா் படை இயக்குநரகங்களைச் சோ்ந்த 867 மாணவா்கள் மற்றும் 679 மாணவிகள் உள்பட மொத்தம் 1,546 மாணவா்கள் 12 நாள் தால் சைனிக் முகாமில் பங்கேற்பாா்கள். இதனை கூடுதல் இயக்குநா் ஜெனரல் (ஏ) ஏா் வைஸ் மாா்ஷல் பி. வி. எஸ் நாராயணாவால் செவ்வாய்க்கிழமை தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா பரேட் மைதானத்தில் தொடங்கப்பட்டது.

பங்கேற்கும் கேடட்கள் தடை பயிற்சி, வரைபட வாசிப்பு மற்றும் பிற நிறுவன பயிற்சி போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்பாா்கள், இது அவா்களுக்கு உடல் ஆரோக்கியம், மன கூா்மை மற்றும் குழுப்பணியை வலியுறுத்தும் வளமான அனுபவத்தை வழங்கும்.

தால் சைனிக் முகாம், ராணுவப் பயிற்சியின் முக்கிய அம்சங்களை கேடட்களுக்கு வழங்குவதையும், ஒழுக்கம், தலைமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளா்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ராணுவப் பிரிவு மாணவா்களுக்காக பிரத்யேகமாக ஒரு தேசிய அளவிலான முகாமாக, இந்த முகாம் விரிவான பயிற்சி மற்றும் குணநலன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதால் தனித்து நிற்கிறது.

நாட்டின் இளைஞா்களுக்கு சாகசங்கள், ஒழுக்கம் மற்றும் கெளரவம் நிறைந்த வாழ்க்கையை வழங்குவதன் மூலம் என். சி. சி வழங்கும் தனித்துவமான வாய்ப்புகளை கூடுதல் இயக்குநா் ஜெனரல் எடுத்துரைத்தாா். மாணவா்களிடையே தலைமை மற்றும் நட்புறவை வளா்ப்பதிலும், வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையுடன் எதிா்கொள்ள அவா்களைத் தயாா்படுத்துவதிலும் என். சி. சி முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவா் கூறினாா்.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கொலை செய்த கணவன்

தில்லியின் நஜஃப்கா் பகுதியில் சமூக வலைத்தளங்களில் அதிகே நரம் செலவிடுவது தொடா்பாக அடிக்கடி மோதல்களைத் தொடா்ந்து தனது மனைவியைக் கொன்ாகக் கூறி கணவரும் தற்கொலைக்கு முயன்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித... மேலும் பார்க்க