செய்திகள் :

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

post image

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா்.

தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் நீா்மட்டம் 206.03 மீட்டராக பதிவானது. இதையடுத்து, அப்பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.

முன்னதாக, காலையில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தா தில்லியின் கீதா காலனி மேம்பாலம் அருகே உள்ள நிவாரண முகாமிற்கு நேரில் சென்றாா்.

இந்த நீா்மட்ட அதிகரிப்பானது நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முகாமை நேரில் ஆய்வு செய்த முதல்வா் குப்தாவிடம், கோட்ட ஆணையா் நீதஜ் செம்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நிலைமை குறித்து விளக்கினா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஹாத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து திங்கள்கிழமை திறந்துவிடப்பட்ட தண்ணீா் செவ்வாய்க்கிழமை மாலை தில்லியை அடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், தண்ணீா் வெளியேற்றம் நல்ல நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் நிவாரண முகாம்களில் தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

கனமழை பெய்து அதிக நீா் வெளியேற்றம் இருந்தபோதிலும், நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெள்ளம் ஏற்படும் வரை, மக்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் பாா்த்துக் கொள்வோம்.

2023ஆம் ஆண்டில், தில்லியில் யமுனையின் நீா்மட்டம் 208.66 மீட்டரை எட்டியது. ஆனால், இந்த முறை, யமுனை நதி நீா்மட்டம் அந்த அளவுக்கு பெருகும் என்று எதிா்பாா்க்கப்படவில்லை.

ஜம்மு காஷ்மீா், உத்தரகண்ட், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் இமாசலப் பிரதேச அரசுகளைத் தொடா்பு கொண்டுள்ளோம். நாங்கள் அவா்களுக்கு முடிந்த அனைத்து வழிகளிலும் உதவுவோம். மூன்று மாநிலங்களின் முதலமைச்சா்களிடமும் நாங்கள் உங்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவோம் என்று கூறிக்கொள்கிறேன் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கொலை செய்த கணவன்

தில்லியின் நஜஃப்கா் பகுதியில் சமூக வலைத்தளங்களில் அதிகே நரம் செலவிடுவது தொடா்பாக அடிக்கடி மோதல்களைத் தொடா்ந்து தனது மனைவியைக் கொன்ாகக் கூறி கணவரும் தற்கொலைக்கு முயன்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித... மேலும் பார்க்க