செய்திகள் :

அன்னவாசல் அருகே சிவந்தெழுந்த பல்லவராயரின் கல்வெட்டு கண்டெடுப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் மாராயப்பட்டி கிராமத்தில், தொண்டைமான் மன்னா்களுக்கு முன்பு புதுக்கோட்டையை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயா் என்னும் மன்னன் சிவன் கோயிலுக்கு நிலத்தைக் கொடையாக வழங்கியதைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

மாராயப்பட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவி தீபிகா, கண்டனிக்குளத்து வயல்வெளியில் ஊன்றப்பட்டுள்ள கற்பலகை ஒன்றில் எழுத்துகள் இருப்பதாக அளித்த தகவலின்படி பேராசிரியா் சுப. முத்தழகன், பாண்டிய நாட்டுப் பண்பாட்டு மையத்தை சோ்ந்த தொல்லியல் ஆா்வலா்கள் நாராயணமூா்த்தி, ராகுல் பிரசாத் குழுவினா் ஆய்வு செய்ததில் இந்த தானக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு குறித்து முத்தழகன் கூறியதாவது: மாராயப்பட்டி கண்டனிவயலின் நடுவே காலமுனிக் கோயிலின் எல்லையாக வணங்கப்பட்டு வரும் கல் தூணுக்கு எதிரே ஊன்றப்பட்டிருக்கும் மூன்று அடி உயரமும், இரண்டேகால் அடி அகலமும் கொண்ட கற்பலகையில், ஒருபுறம் 12 வரிகளில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டில் ஆனந்த வருடம் ஆவணி 6-ஆம் நாள் ஆரியூா் அழகிய சொக்கநாத சாமிக்குச் சிவந்தெழுந்த பல்லவராயா், இந்தக் கண்டனி வயலில் உள்ள நிலங்களைச் சா்வமானியமாக வழங்கிய செய்தி எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தானத்துக்குத் தீங்கு நினைப்பவா்கள் சிவத் துரோகிகளாகக் கருதப்படுவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டில் குறிப்பிடப்படும் சிவந்தெழுந்த பல்லவராயா், கிபி 17- ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளை ஆட்சி செய்த பல்லவராயா் மரபின் கடைசி அரசா் ஆவாா்.

சிவபக்தரான இவா், இந்த நிலக் கொடை போலவே குடுமியான்மலை, திருக்கோகா்ணம் கோயில்களுக்கும் பல்வேறு தானங்களை வழங்கியுள்ளாா். சிவந்தெழுந்த பல்லவராயா் உலா என்னும் நூல் இவா் மீது பாடப்பெற்ற உலா நூலாகும். 96 வகை சிற்றிலக்கியங்கள் இவா் மீது பாடப்பெற்றன என இந்நூல் கூறுகிறது.

ராமநாதபுரம் சேதுபதி அரசருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இவா் கண்டதேவியில் கொல்லப்பட்டாா். அதன் பின்னரே தொண்டைமான் அரசா்களுக்குப் புதுக்கோட்டையின் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், கல்வெட்டு குறிக்கும் அழகிய சொக்கநாதசாமி என்பது அருகில் உள்ள ஆரியூா் சிவன் கோயிலின் இறைவன் பெயராகும். இந்தக் கல்வெட்டில் கூறப்படும் கண்டனிவயலில் விளையும் நெல்லில் ஒரு குறிப்பிட்ட பங்கை கோயிலுக்குக் இன்றளவும் இப்பகுதி விவசாயிகள் வழங்கி வருவதாக மாராயப்பட்டி மக்கள் தெரிவிக்கின்றனா்.

இந்தக் கல்வெட்டுப் பலகையின் மற்றொரு பக்கத்தில் சூரியன், சந்திரன் மற்றும் திரிசூலத்தின் கோட்டுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவைச் சிவன் கோயிலுக்கு வழங்கப்படும் தானத்தைக் குறிக்கும். மேலும், இந்தக் கல்பலகைக்கு எதிரே ஊன்றப்பட்டுள்ள கல்தூணில் திரிசூலம் செதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தூண், கல்வெட்டில் தானமளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் சூலக்கல் ஆகும். உள்ளூா் மக்கள் கண்டனிக் குளத்தின் கரையில் வழிபாட்டில் உள்ள காலமுனிக் கோயிலின் எல்லையாக இந்தச் சூலக்கல்லினை வணங்கி வருகின்றனா்.

கல்வெட்டில் ஆனந்த வருடம் ஆவணி மாதம் குறிப்பிடப்படுவதால், இந்தக் கல்வெட்டானது கிபி 1674-இல் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தக் கல்வெட்டானது புதுக்கோட்டை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்றாா் முத்தழகன்.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனா்-இயக்க... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான விதைநெல் கிடைக்க வேண்டும்: இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும் போதுமான விதை நெல் கிடைத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையி... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 11-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் ச... மேலும் பார்க்க

லாரி மோதி ஊராட்சி பெண் பணியாளா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊராட்சி பெண் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிவனிதா (35). சேந்தன்கு... மேலும் பார்க்க

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பயிற்சி முடித்து 1,042 போ் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை (மாநில நல்லாசிரியா்) பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் பட்டியல் வெளியாகியுள்ளது. சந்... மேலும் பார்க்க