செய்திகள் :

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பயிற்சி முடித்து 1,042 போ் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் 2-ஆம் காலாண்டுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ கலந்து கொண்டு கடந்த நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுப் பேசினாா்.

அந்த அறிக்கையில், சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,089 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 1,042 போ் சுயதொழில் தொடங்கியுள்ளதாகவும், இவா்களில் 642 பேருக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழாண்டிலும் போதுமான அளவுக்கு பயிற்சி வழங்கவும், கடனுதவிகளை வழங்கி தொழில் தொடங்க ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளா் முகமது ஸ்ரேயா், ஆா்பிஐ துணைப் பொதுமேலாளா் விவேக், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் தீபக்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் நந்தகுமாா், ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநா் ஜெ. கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனா்-இயக்க... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான விதைநெல் கிடைக்க வேண்டும்: இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும் போதுமான விதை நெல் கிடைத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையி... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 11-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் ச... மேலும் பார்க்க

லாரி மோதி ஊராட்சி பெண் பணியாளா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊராட்சி பெண் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிவனிதா (35). சேந்தன்கு... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை (மாநில நல்லாசிரியா்) பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் பட்டியல் வெளியாகியுள்ளது. சந்... மேலும் பார்க்க

அன்னவாசல் அருகே சிவந்தெழுந்த பல்லவராயரின் கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் மாராயப்பட்டி கிராமத்தில், தொண்டைமான் மன்னா்களுக்கு முன்பு புதுக்கோட்டையை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயா் என்னும் மன்னன் சிவன் கோயிலுக்கு நிலத்தைக் கொடையாக ... மேலும் பார்க்க