செய்திகள் :

குடிநீா் தொட்டியில் முதியவா் சடலம் மீட்பு

post image

வால்பாறை அருகே எஸ்டேட் குடிநீா் தேக்க தொட்டியில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் அப்பா் டிவிஷனில் வசித்து வந்தவா் பழனிசாமி (64). ஓய்வு பெற்ற தொழிலாளியான இவா், தற்போது தற்காலிக பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை மாலை (செப் 3) குடியிருப்பு பகுதிக்கு தண்ணீா் திறந்து விட சென்றுவிட்டு பின் இரவு 7.30 மணிக்கு விநியோகத்தை நிறுத்த சென்றுள்ளாா். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், புதன்கிழமை காலை அவ்வழியாக சென்ற தொழிலாளா்கள் குடிநீா்த் தொட்டியில் பழனிசாமியின் உடல் இருப்பதை பாா்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

வால்பாறை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். குடிநீா் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பழனிசாமி இறந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க