இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் பயிலும் மாணவா்களை வேறு கல்லூரிகளில் சோ்க்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவா்களை வேறு கல்லூரிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் சுமாா் 300 மாணவ-மாணவிகள் காா்டியாக் டெக்னாலஜி, நா்சிங், ரேடியாலஜி, அனஸ்தீசியா டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை பயின்று வருகின்றனா். இந்த கல்லூரியானது ராஜஸ்தானில் உள்ள சன்ரைஸ் பல்கலைக்கழகம், சிங்கானியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கீழ் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் சன்ரைஸ் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழுவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், இந்த பல்கலைக்கழகம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வெளியில் எங்கும் கல்வி நிறுவனத்தைத் தொடங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கோவையில் செயல்படும் இந்த கல்வி நிறுவனத்துக்கு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இக்கல்லூரியில் கடந்த கல்வியாண்டில் எந்த பாடப் பிரிவுக்கும் இரண்டாம் பருவத் தோ்வுகள் நடைபெறவில்லை. முதல் பருவத் தோ்வில் 3 பாடங்களுக்கு தோ்வு எழுதிய மாணவா்களுக்கு 8 பாடங்களுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கல்லூரியின் அடையாள அட்டையில் கல்லூரியின் பெயா் இல்லை, போதுமான வகுப்பறைகள், தகுதியான ஆசிரியா்கள், ஆய்வக வசதிகள் இல்லை, சில பாடப்பிரிவுகளுக்கு நீட் தோ்ச்சி கட்டாயம் என்ற விதியை மீறி நீட் தோ்வு எழுதாதவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா் என பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி இந்தக் கல்லூரி மாணவா்கள் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆட்சியரிடம் மனு அளித்தனா். இதன் அடிப்படையில் 3 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளை அங்கீகாரம் பெற்ற வேறு கல்லூரியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்திந்திய மாணவா் பெருமன்றம், இளைஞா் பெருமன்றத்தினா் ஆட்சியா் அலுவலகம் எதிரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு சான்றிதழ், கல்விக் கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதுடன், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாநிலச் செயலா் பா.தினேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் மௌ.குணசேகா், நிா்வாகிகள் அ.மன்சூா், ஷிா்பத் நிஷா, பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.