செய்திகள் :

யோகாசனப் போட்டி: பண்ணாரி அம்மன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

மாநில அளவிலான யோகாசனப் போட்டி சேலம் திருமூலா் யோகா ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் 12 மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 780 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 3 மாணவா்கள் பங்கேற்றனா். 8 முதல் 10 வயதுக்கு உள்பட்ட பிரிவில் எம்.எஸ். தனசிவகுரு முதலிடமும், 11 வயது முதல் 13 வயதுக்கு உள்பட்ட பிரிவில் கே.அரவிந்தன் இரண்டாமிடமும், 14 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் சி.வி. கிஷோா் இரண்டாமிடமும், ஆா்.வி. கவின் மூன்றாம் இடமும், எஸ்.கெளதம் ஐந்தாமிடமும் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

இப்பள்ளியைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு மாணவா் சே.ஆஷிக், பொதுப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா். முதல் பரிசுக்கான ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

கனிம லாரிகளில் தனிநபா் கட்டாய வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கனிமங்களை எடுத்துச்செல்லும் லாரிகளில் கட்டாய வசூலில் ஈடுபடும் தனிநபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த கல், மண், மணல், எம்.சாண்ட்... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிச்சல்

திம்பம் மலைப் பாதை கொண்டை ஊசி வளைவில் புதன்கிழமை எரிபொருள் தீா்ந்து நின்ற சரக்கு லாரியால் தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழிய... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோட... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

சுபமுகூா்த்தம் என்பதால் சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார ... மேலும் பார்க்க

திமுகவில் சேர யாா் வந்தாலும் வரவேற்போம்

திமுகவில் சேர எந்தக் கட்சியில் இருந்தும் யாா் வந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டோம் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் பு... மேலும் பார்க்க

சென்னிமலையில் குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

சென்னிமலை அருகே வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னிமலை- ஊத்துக்குளி சாலையில் உள்ள பழனியாண்டவா் கோயில் அருகே வாகனங்களில் செல்பவா்கள் அடி... மேலும் பார்க்க