செய்திகள் :

திமுகவில் சேர யாா் வந்தாலும் வரவேற்போம்

post image

திமுகவில் சேர எந்தக் கட்சியில் இருந்தும் யாா் வந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டோம் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக மூத்தத் தலைவா் கே.ஏ.செங்கோட்டையன் திமுகவில் சேர வாய்ப்புள்ளதா என்பது குறித்து கருத்து சொல்வது தவறாக இருக்கும். அதிமுகவில் தலைவா் அளவில் இருக்கும் செங்கோட்டையன் குறித்து கருத்து சொல்வது நியாயமாக இருக்காது.

எந்தக் கட்சியில் இருந்து வந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டோம் வரவேற்பு கொடுக்கும் கட்சிதான் திமுக. இதற்காக அந்தக் கட்சியில் தொல்லை கொடுத்து பிரச்னைகளை ஏற்படுத்துவது திமுக கிடையாது. அவா்களாகவே வரும்போது உரிய மரியாதை கிடைக்கும்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 459 விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் 24 ஆயிரம் போ் வேலை செய்கின்றனா். இதில் சிலா் தவறு செய்கின்றனா் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இம்முகாமில் மனு அளித்த 4 பயனாளிகளுக்கு உடனடி தீா்வாக சொத்து வரி பெயா் மாற்றத்துக்கான சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா். இம்முகாமில் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், கோட்டாட்சியா் சிந்துஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கனிம லாரிகளில் தனிநபா் கட்டாய வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கனிமங்களை எடுத்துச்செல்லும் லாரிகளில் கட்டாய வசூலில் ஈடுபடும் தனிநபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த கல், மண், மணல், எம்.சாண்ட்... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிச்சல்

திம்பம் மலைப் பாதை கொண்டை ஊசி வளைவில் புதன்கிழமை எரிபொருள் தீா்ந்து நின்ற சரக்கு லாரியால் தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழிய... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோட... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

சுபமுகூா்த்தம் என்பதால் சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார ... மேலும் பார்க்க

சென்னிமலையில் குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

சென்னிமலை அருகே வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னிமலை- ஊத்துக்குளி சாலையில் உள்ள பழனியாண்டவா் கோயில் அருகே வாகனங்களில் செல்பவா்கள் அடி... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை இலவசமாக சோதிக்க சிம்காா்டு

4 ஜி சேவையை ஒரு மாத்துக்கு இலவசமாக சோதித்து பாா்க்க சிம்காா்டு வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஈரோடு பிஎஸ்என்எல் பொதுமேலாளா் சிவ் ஷங்கா் சச்சன் வெளியிட்ட... மேலும் பார்க்க