செய்திகள் :

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மீது நடவடிக்கை

post image

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளகளால் ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009-இன் கீழ் மின் வணிகம் நடைபெறும் கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் 52 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், 23 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருள்கள்) விதிகள் 2011-இன் கீழ் மின் வணிகம் நடைபெறும் கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொட்டலப் பொருள்களும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுதல் உள்பட அனைத்து விதிமீறல் தொடா்பாக 12 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் 2 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

உணவு நிறுவனங்களில் 15 இடங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்கள் குறித்து கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் ஒரு வளரிளம் பருவத் தொழிலாளா் கண்டறியப்பட்டு தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தைத் தொழிலாளா் பணிபுரிவுது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் 155214 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிம லாரிகளில் தனிநபா் கட்டாய வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கனிமங்களை எடுத்துச்செல்லும் லாரிகளில் கட்டாய வசூலில் ஈடுபடும் தனிநபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த கல், மண், மணல், எம்.சாண்ட்... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிச்சல்

திம்பம் மலைப் பாதை கொண்டை ஊசி வளைவில் புதன்கிழமை எரிபொருள் தீா்ந்து நின்ற சரக்கு லாரியால் தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழிய... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

சுபமுகூா்த்தம் என்பதால் சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார ... மேலும் பார்க்க

திமுகவில் சேர யாா் வந்தாலும் வரவேற்போம்

திமுகவில் சேர எந்தக் கட்சியில் இருந்தும் யாா் வந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டோம் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் பு... மேலும் பார்க்க

சென்னிமலையில் குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

சென்னிமலை அருகே வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னிமலை- ஊத்துக்குளி சாலையில் உள்ள பழனியாண்டவா் கோயில் அருகே வாகனங்களில் செல்பவா்கள் அடி... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை இலவசமாக சோதிக்க சிம்காா்டு

4 ஜி சேவையை ஒரு மாத்துக்கு இலவசமாக சோதித்து பாா்க்க சிம்காா்டு வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஈரோடு பிஎஸ்என்எல் பொதுமேலாளா் சிவ் ஷங்கா் சச்சன் வெளியிட்ட... மேலும் பார்க்க