செய்திகள் :

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம்

post image

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார்.

மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, "நம் எல்லோருக்கும் ஒரு அம்மா இருக்கிறார், யாரும் யாருடைய அம்மாவைப் பார்த்தும் அவதூறான வார்த்தைகளைப் பேசக் கூடாது. அதுபோன்ற செயல்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவளிப்பதில்லை.

Prajwal Revanna - பிரஜ்வல் ரேவண்ணா
Prajwal Revanna - பிரஜ்வல் ரேவண்ணா

ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், பிரதமர் மோடி எதற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.பி) ஆதரவாக வாக்கு கேட்டார் என்பதுதான்"

மேலும் அவர், "மோடிஜி தான் ‘50 கோடி காதலி’ எனப் (சசி தரூரின் மனைவையை நோக்கி) பேசினார், சோனியா காந்தி குறித்து அவதூறான வார்த்தைகளைப் பேசினார். அவர் நிதிஷ் குமாரின் DNA குறித்துப் பேசியது சரியானதா? பீகார் சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் என் அம்மாவையும் சகோதரியையும் அவமதித்துள்ளனர். சிலமுறை பாஜகவினர் கேமரா முன்னிலையிலேயே அம்மாக்களையும் சகோதரிகளையும் அவதூறாகப் பேசியிருக்கின்றனர்." என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி

மேலும் மோடி தாய் குறித்து பேசிய நேரத்தையும் விமர்சனத்துள்ளாக்கினார் தேஜஸ்வி.

மோடி அந்த நிகழ்வுக்குப் பிறகு வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு சிரித்து மகிழ்ந்தார். இந்தியா திரும்பிய உடனேயே அழத் தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார் தேஜஸ்வி.

மேலும் எதிர்க்கட்சியினர் பாஜக தலைவர்கள் பெண்களை அவதூறாக பேசியுள்ளனர் என்று விமர்சித்துள்ளனர். சமீபத்தில் பாஜக தலைவர் ஒருவர், ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் சரிகா பாஸ்வான், தெருக்களில் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார் என்று மிரட்டியதாகவும் குறிப்பிட்டார் தேஜஸ்வி யாதவ்.

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் ம... மேலும் பார்க்க

NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்!

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழக கல்வி நிறுவனங்கள் முதலிடம் பிடித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வ... மேலும் பார்க்க

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எ... மேலும் பார்க்க