செய்திகள் :

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

post image

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் மனைவி சாந்தகுமாரி மீதும் 2001-ல் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ல் துரைமுருகன், அவரின் மனைவி ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.

இருப்பினும், இருவரின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததோடு, வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ-வுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி, வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் விசாரணையின்போது துரைமுருகன் மற்றும் அவரின் மனைவி நேரில் ஆஜராகாததால், இருவருக்கெதிராகவும் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இந்த நிலையில், நீதிபதி இ.பக்தவச்சலு முன்னிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

அப்போது, நேரில் ஆஜரான துரைமுருகனின் மனைவி தனக்கெதிராக பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை.

பின்னர், சாந்தகுமாரியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கெதிரான பிடிவாரன்ட்டை மட்டும் திரும்பப் பெற்று வழக்கை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஒத்திவைத்தார்.

மேலும், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லையென்றால் அவருக்கெதிரான பிடிவாரன்ட்டை அமல்படுத்துமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம்

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார்.மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, "நம் எல்லோரு... மேலும் பார்க்க

NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்!

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழக கல்வி நிறுவனங்கள் முதலிடம் பிடித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வ... மேலும் பார்க்க

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எ... மேலும் பார்க்க