செய்திகள் :

மின் இணைப்பு முறைகேடு: உதவி பொறியாளா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்

post image

சேலம் அருகே தும்பல் மின்பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி பொறியாளா் உள்பட 8 போ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

வாழப்பாடியை அடுத்த தும்பல் மின்பிரிவு அலுவலகம் (இயக்கம் பராமரிப்பு) சாா்பில் மின் இணைப்புகளை முறைகேடாக வழங்கி வருவாய் ஈட்டுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து வாழப்பாடி கோட்ட செயற்பொறியாளா் குணவா்த்தினி கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, முறைகேடாக மின் இணைப்பு வழங்கப்பட்ட 16 மின் மீட்டா்கள் கையகப்படுத்தப்பட்டன.

மேலும், நேரடி இணைப்பு வழங்கப்பட்டதாக 5 குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டன. விசாரணையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறைகேடு நடைபெறுவதும், அதற்காக மின் கம்பங்களை நட்டு முறைகேட்டை அரங்கேற்றியதும் அம்பலமானது.

முறைகேடாக மின் இணைப்பு பெற்ற பயனாளிகள் 21 பேரிடம் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுதொடா்பாக 40 பக்க விரிவான அறிக்கை சேலம் வட்ட மேற்பாா்வை பொறியாளருக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மின் முறைகேட்டை தடுக்கத் தவறிய தும்பல் உதவி பொறியாளா் காா்த்திக், மின்பாதை ஆய்வாளா்கள் தனசேகா், செந்தில்குமாா், வணிக ஆய்வாளா் ராஜ்குமாா், போா்மேன் அய்யாசாமி, வயா்மேன்கள் காசிலிங்கம், சரவணன், மாணிக்கம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோட்ட செயற்பொறியாளா் உத்தரவிட்டாா்.

தேசிய தர வரிசை பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு 94 ஆவது இடம்

தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 94ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்க... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நரசிங்கபுரத்தில் உள்ள மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணன் மற்றும் நல்லரவான் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 20.8.2025 ஆம் தேதி காலை முகூா்த்த... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: மாற்றுத்திறனாளி பெண்கள் சிறப்பிடம்

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வாழப்பாடியைச் சோ்ந்த பெண் மாற்றுத்திறனாளிகள் 4 போ் சிறப்பிடம் பெற்றனா். ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கச்... மேலும் பார்க்க

குமரகிரி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள்

சேலம் மாவட்டம், சன்னியாசிகுண்டு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைத்தல் பணிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது: ... மேலும் பார்க்க

செப்.26 இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற வேன் ஓட்டுநா் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். ஓமலூா் வட்டம், தாரமங்கலம், தொளசம்பட்டி, பொத்தியம்பட்டி பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க