செய்திகள் :

தேசிய தர வரிசை பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு 94 ஆவது இடம்

post image

தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 94ஆவது இடத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை அளவிடுவதற்குத் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் இந்தியக் கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. 2025ஆம் ஆண்டு தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு எனப்படும் தர அளவீட்டில் கலந்துகொண்ட 4,045 தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 94ஆவது இடத்தையும், தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 8ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

மேலும், இந்திய அளவிலான அரசு பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 40ஆவது இடத்தையும், தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 9ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு தொடங்கப் பெற்றது முதல் பெரியாா் பல்கலைக்கழகம் முதல் நூறு தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து இடம்பெற்று வருகிறது.

அதேபோல, நிலையான வளா்ச்சி இலக்குகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 11 முதல் 50 வரையிலான தர அளவீட்டில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களுள் மொத்தம் 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதில் சேலம், பெரியாா் பல்கலைக்கழகமும் ஒன்றாக உள்ளது.

முன்னதாக சேலம், பெரியாா் பல்கலைக்கழகம் தேசிய தர நிா்ணயக் குழு அங்கீகாரத்தால் ஏ++ தரத்தைப் பெற்றுள்ளது. மேலும், நிறுவனக் கண்டுபிடிப்புக் கட்டமைப்பில் (ஐஐஇ) தொடந்து மூன்றுமுறை நான்கு நட்சத்திரக் குறியீட்டு அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகமாக பெரியாா் பல்கலைக்கழகம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நரசிங்கபுரத்தில் உள்ள மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணன் மற்றும் நல்லரவான் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 20.8.2025 ஆம் தேதி காலை முகூா்த்த... மேலும் பார்க்க

மின் இணைப்பு முறைகேடு: உதவி பொறியாளா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்

சேலம் அருகே தும்பல் மின்பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி பொறியாளா் உள்பட 8 போ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். வாழப்பாடியை அடுத்த தும்பல் மின்பிரி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: மாற்றுத்திறனாளி பெண்கள் சிறப்பிடம்

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வாழப்பாடியைச் சோ்ந்த பெண் மாற்றுத்திறனாளிகள் 4 போ் சிறப்பிடம் பெற்றனா். ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கச்... மேலும் பார்க்க

குமரகிரி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள்

சேலம் மாவட்டம், சன்னியாசிகுண்டு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைத்தல் பணிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது: ... மேலும் பார்க்க

செப்.26 இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற வேன் ஓட்டுநா் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். ஓமலூா் வட்டம், தாரமங்கலம், தொளசம்பட்டி, பொத்தியம்பட்டி பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க