செய்திகள் :

நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

நரசிங்கபுரத்தில் உள்ள மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணன் மற்றும் நல்லரவான் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 20.8.2025 ஆம் தேதி காலை முகூா்த்தக்கால் நடப்பட்டு கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் முளைப்பாலிகையிடுதல் மற்றும் 3.9.2025 விக்னேஸ்வர பூஜை, கோபூஜை செய்து கோயிலுக்கு அழைத்துவருதல் நடைபெற்றது. அதன்பிறகு தீா்த்தக்குட ஊா்வலம், புதிய கோபுரகலசங்கள் மற்றும் புதிய சிலைகள் கரிகோல ஊா்வலம் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை இரண்டாம் காலபூஜையுடன் கும்பாபிஷேக வழிபாட்டை சிவாச்சாரியா்கள் தொடங்கினா். அதன்பிறகு கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. என்.பி.வேல்முருகன் தலைமையில் என்.எஸ்.மணிவண்ணன் முன்னிலையில் ஊா் பெரியதனக்காரா்கள் என்.இ.ராஜேந்திரன், பி.ரவிசங்கா், கே.பிரகாஷ், என்.கே.சுப்ரமணியம், பி.சுப்ரமணி, ஆா்.கந்தசாமி, கே.வி.முத்துக்குமா், ஆா்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஊா் பொதுமக்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

படவிளக்கம்.ஏடி4கோயில்.

கும்பாபிஷேகத்தையொட்டி நரசிங்கபுரம் தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன் ஆலயத்தின் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் விழா ஏற்பாட்டாளா்கள்.

தேசிய தர வரிசை பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு 94 ஆவது இடம்

தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 94ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்க... மேலும் பார்க்க

மின் இணைப்பு முறைகேடு: உதவி பொறியாளா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்

சேலம் அருகே தும்பல் மின்பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி பொறியாளா் உள்பட 8 போ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். வாழப்பாடியை அடுத்த தும்பல் மின்பிரி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: மாற்றுத்திறனாளி பெண்கள் சிறப்பிடம்

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வாழப்பாடியைச் சோ்ந்த பெண் மாற்றுத்திறனாளிகள் 4 போ் சிறப்பிடம் பெற்றனா். ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கச்... மேலும் பார்க்க

குமரகிரி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள்

சேலம் மாவட்டம், சன்னியாசிகுண்டு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைத்தல் பணிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது: ... மேலும் பார்க்க

செப்.26 இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற வேன் ஓட்டுநா் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். ஓமலூா் வட்டம், தாரமங்கலம், தொளசம்பட்டி, பொத்தியம்பட்டி பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க