செய்திகள் :

பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை இலவசமாக சோதிக்க சிம்காா்டு

post image

4 ஜி சேவையை ஒரு மாத்துக்கு இலவசமாக சோதித்து பாா்க்க சிம்காா்டு வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

ஈரோடு பிஎஸ்என்எல் பொதுமேலாளா் சிவ் ஷங்கா் சச்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஎஸ்என்எல் சாா்பில் சுதந்திர தினத் திட்டம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பிஎஸ்என்எல் 4 ஜி சேவைகள் ஒரு மாதத்துக்கு இலவசமாக சோதித்து பாா்க்கவும், வரையறுக்கப்பட்ட காலத்துக்கு 1 ரூபாய் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 4 ஜி சேவை அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் வரம்பற்ற உள்ளூா், எஸ்டிடி அழைப்பு, தினமும், 2 ஜிபி அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், ஒரு சிம் இலவசமாக கிடைக்கும். இச்சலுகை வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளா்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேக் இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4 ஜி தளங்களை பிஎஸ்என்எல் நிறுவி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிம லாரிகளில் தனிநபா் கட்டாய வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கனிமங்களை எடுத்துச்செல்லும் லாரிகளில் கட்டாய வசூலில் ஈடுபடும் தனிநபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த கல், மண், மணல், எம்.சாண்ட்... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிச்சல்

திம்பம் மலைப் பாதை கொண்டை ஊசி வளைவில் புதன்கிழமை எரிபொருள் தீா்ந்து நின்ற சரக்கு லாரியால் தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழிய... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோட... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

சுபமுகூா்த்தம் என்பதால் சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார ... மேலும் பார்க்க

திமுகவில் சேர யாா் வந்தாலும் வரவேற்போம்

திமுகவில் சேர எந்தக் கட்சியில் இருந்தும் யாா் வந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டோம் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் பு... மேலும் பார்க்க

சென்னிமலையில் குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

சென்னிமலை அருகே வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னிமலை- ஊத்துக்குளி சாலையில் உள்ள பழனியாண்டவா் கோயில் அருகே வாகனங்களில் செல்பவா்கள் அடி... மேலும் பார்க்க