செய்திகள் :

8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த மோடி அரசை பாராட்டுகிறேன்: ப. சிதம்பரம்

post image

மதுரை: 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்து அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை குறைத்துள்ள மோடி அரசை பாராட்டுகிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி வகிதங்களில் கொண்டு வந்துள்ள மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்து அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை குறைத்துள்ள மோடி அரசை பாராட்டுகிறேன்.

2007 இல் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தும்போது இது தவறு இதுபோன்ற பல்வேறு வரி விகிதங்களை வைக்காதீர்கள் என்று அறிவுறுத்தினோம். தலைமை பொருளாதார ஆலோசகர் அர்ஜுன் சுப்பிரமணியம் இது தவறு என அறிவுறுத்தினார்.

ஆனால், நிதி அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ நாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம்.

பல தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் உள்ள தவறுகளை திருத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால் அவற்றை எல்லாம் பாஜக அரசு கேட்கவில்லை. இப்போதாவது தவறுகளை உணர்ந்து தற்போது திருத்தியதற்காக நான் நன்றி சொல்கிறேன். 8 ஆண்டுகள் நடுத்தர மக்களை, ஏழை மக்களை வரிகளால் கசக்கிப் பிழிந்தனர். 12 சதவீதம் மற்றும் 18 சதவீதமாக இருந்த வரியை 5 சதவீதமாக குறைத்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

இத்தனை ஆண்டுகளாக அதே மக்கள் தானே 18 சதவீதம் வரியை செலுத்தினார்கள். இப்போது அது பொருத்தம் என்றால் கடந்த ஆண்டும் இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் பணத்தை எல்லாம் வாரியாக வசூல் செய்து மக்களை கசக்கிப் பிழிந்த மத்திய அரசு, இப்போதாவது மனம் திருந்தி வரி விகிதங்களை குறைத்து உள்ளார்கள். அதற்காக நான் பாராட்டுகிறேன் என்று சிதம்பரம் கூறினார்.

ஒரு நாடு, ஒரு வரி, ஒரு நாடு ஒன்பது வரிகளாக மாறியது எப்படி?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

I commend the Modi government for realizing its mistakes after 8 years and reducing the Goods and Services Tax rate on essential goods.

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு ஸ்ரீகபர்தீஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோ... மேலும் பார்க்க

ஒரு நாடு, ஒரு வரி, ஒரு நாடு ஒன்பது வரிகளாக மாறியது எப்படி?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய பாஜக அரசை கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஒரு நாடு, ஒரு வரி" என்பதை "ஒரு நாடு, 9 வரிகள்" என்று மாற்றியுள்ளதாக வியாழக்கிழம... மேலும் பார்க்க

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராம் ரூ.9,805-க்கும், பவுன் ரூ.78,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கணிசமாக குறைந்துள்ளது. இந்திய பொருள்களின் மீதமான அமெரிக்க அரசின் 50 ... மேலும் பார்க்க

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாக உத்தரவை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங... மேலும் பார்க்க

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

தமிழ்நாடு பேரவைத் தேர்தலையொட்டி உள்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்த... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்

வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலக உதவியாளா் காலி பணியிடங்களை ... மேலும் பார்க்க