செய்திகள் :

சென்னை ஐஐடி மீண்டும் தேசிய தரவரிசையில் முதலிடம்: ஏழாவது ஆண்டாக ஆதிக்கம்!

post image

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்ஐஆர்எஃப்) 2025 கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர மிகவும் உதவியாக உள்ளது.

அதன் அடிப்படையில் கல்வி அமைச்சகம் 10வது தரவரிசைப் பதிப்பை இன்று அறிவித்தது. ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகமாக ஐஐஎஸ்சி பெங்களூர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜெஎன்யு) புதுதில்லி மற்றும் மணிப்பால் உயர் கல்வி அகாடமி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.

கல்லூரிகள் பிரிவில் தில்லியில் உள்ள இந்து கல்லூரி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. மிராண்டா ஹவுஸ் மற்றும் ஹன்ஸ்ராஜ் கல்லூரி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

பொறியியல் பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஐஐடி தில்லி மற்றும் ஐஐடி மும்பை ஆகியவையாகும். நாட்டின் சிறந்த மேலாண்மை நிறுவனமாக ஐஐஎம் அகாமதாபாத் உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் ஜாமியா ஹம்தார்ட் புதுதில்லி மருந்தகப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது. மருத்துவக் கல்வித் துறையில், புது தில்லி எய்ம்ஸ் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரியாக தனது நிலையை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

மமதா பேச்சுக்கு எதிர்ப்பு! மேற்கு வங்க பேரவை அமளியில் பாஜக கொறடா காயம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது காயம் அடைந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.வெளி மாநிலங்களில்... மேலும் பார்க்க

மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும்: ராகுல்

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக எம்எல்ஏகூட இருக்க மாட்டார்கள்: மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத சூழலை பாஜக எதிர்கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் வங்க மொழி பேசும் மக்களுக்க... மேலும் பார்க்க

பறவை மோதல்! விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடா விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது கழுகு மோதியதால், அதன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.விஜயவாடாவில் இருந்து பெங்களூரு நோக்கி, இன்று (செப்.4)... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு வழிவகுத்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.இமயமலை மாநிலங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவுகளைத் தடுக்கவும... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை ஜிஎஸ்டி கட்டமைப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் நிரூபிக்கின்றன என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு தனது பிம்பத... மேலும் பார்க்க