செய்திகள் :

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

post image

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு வழிவகுத்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இமயமலை மாநிலங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவுகளைத் தடுக்கவும், வரலாறு காணாத நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளங்கள் குறித்து ஆராய நிபுணர்களை உள்ளடக்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவைஅமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் அனாமிகா ராணா என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

அப்போது தலைமை நீதிபதி பேசியதாவது:

“உத்தரகண்ட், ஹிமாசல் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளங்களை நாம் கண்டுள்ளோம். ஊடகங்களில் வெளியான காட்சிகளில், வெள்ளத்தில் ஏராளமான மரக்கட்டைகள் ஓடிக் கொண்டிருந்தன.

அவையெல்லாம் சட்டவிரோதமாக வெட்டப்பட்டது போன்று தெரிகிறது. சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது பேரழிவுகளுக்கு வழிவகுத்ததுள்ளது. வளர்ச்சிக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் ஹிமாசல் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு பிறகு நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The Chief Justice of the Supreme Court said on Thursday that illegal cutting of trees has led to the disaster.

இதையும் படிக்க : பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நர... மேலும் பார்க்க

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

காங்கிரஸை போல் வரி விதித்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர... மேலும் பார்க்க

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்... மேலும் பார்க்க

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக்... மேலும் பார்க்க