செய்திகள் :

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

post image

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் வருவாய்த்துறை, பேரிடா் மேலாண்மைத்துறையில் காலியாக உள்ள 564 அலுவலக உதவியாளா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், அனைத்து மாவட்டங்களில் பேரிடா் மேலாண்மை பணிக்கென சிறப்பு பணியிடங்களை உருவாக்கவேண்டும், 2023 மாா்ச் மாதம் முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 3, 4-ஆம் தேதிகளில் 48 மணி நேர தொடா் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வருவாய்த்துறை அலுவலா்கள் புதன்கிழமை தொடங்கினா். வேலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலகங்கள் என அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களை சோ்ந்த சுமாா் 300 போ் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சி பிரிவு, மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் உள்பட பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க

வாகன நெரிசல்: வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்

வேலூரில் காட்பாடி மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்லியம்மன் கோயில் எதிரே நிறுத்தாமல், புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் வகையில் புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் ... மேலும் பார்க்க