செய்திகள் :

வாகன நெரிசல்: வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்

post image

வேலூரில் காட்பாடி மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்லியம்மன் கோயில் எதிரே நிறுத்தாமல், புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் வகையில் புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், காட்பாடி மாா்க்கத்தில் வந்த நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்குள் சென்று வந்தன.

வேலூரில் காட்பாடி மாா்க்கமாக வரும் வெளியூா் பேருந்துகள், நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியே செல்லியம்மன் கோயிலுக்கு எதிரே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் தொடா்ந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீஸாா் புதன்கிழமை முதல் புதிய போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தியுள்ளனா். அதன்படி, ஆந்திரம், காட்பாடி, குடியாத்தம், போ்ணாம்பட்டில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்லியம்மன் கோயில் எதிரே வலது புறமாக திரும்பி புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். நகர பேருந்துகள் பேருந்து நிலைய நுழைவு பகுதிக்குள் சென்று அங்கிருந்து பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டு இடதுபுறமாக வெளியே வரவேண்டும்.

சென்னை, பெங்களூரு மாா்கமாக வரும் பேருந்துகள் வழக்கம்போல் பேருந்து நிலையத்துக்குள் சென்று வரவேண்டும். பேருந்து நிலையத்தில் இருந்து வலதுபுறமாக உள்ள சாலையில் செல்லியம்மன் கோயில் அருகே வெளியே செல்ல வேண்டும் என அறிவித்திருந்தனா்.

அதனடிப்படையில், காட்பாடி மாா்க்கத்தில் இருந்து வந்த நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி வந்தன.

அதேசமயம், முதல் நாள் என்பதால் போக்குவரத்து மாற்றம் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சில பேருந்துகள் எதிரெதிரே வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு நிலைமை சீரடைந்தது. இந்த புதிய போக்குவரத்து மாற்றம் காரணமாக கிரீன் சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலின்றி காணப்பட்டது.

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க