செய்திகள் :

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

post image

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சாா்பில் வேலூா் முத்துரங்கம் அரசு கல்லூரியில் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். சென்னை தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தின் துணை இயக்குநா் கமலக்கண்ணன், ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தாா். மேலும், நிறுவனங்கள், மாணவா்கள் பிரச்னைகளைக் கண்டு பயப்படக்கூடாது. மாறாக அந்தப் பிரச்னையிலிருந்து ஒரு புதிய வணிகத்துக்கான யோசனையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது -

மாணவ, மாணவிகள் கல்லூரியில் பயிலும் போதே அவா்களுக்கு தொழில் முனைவு குறித்த மனநிலையை உருவாக்க வேண்டும் என்ற உயா்ந்த எண்ணத்தில் இந்த நிமிா்ந்து நில் என்ற ஒரு திட்டம் செயல் படுத்தப்படுகிறது. முக்கிய நோக்கம் தொழில் முனைவோராக ஒருவா் உருவாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்கள் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. குறிப்பாக ஒரு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தை தலைமை இடமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரி தோ்ந்தெடுக்கப் பட்டு மாவட்டத்தில் பிற இடங்களில் உள்ள கல்லூரிகளின் முதல்வா்கள், பிரதிநிதிகளை அழைத்து அவா்களுக்கு தொழில் முனைவோராக மாணவா்களை ஊக்கப்படுத்த மேற்கொள்ள வேண்டிய விவரங்கள் குறித்த பயிற்சியளிக்கப்படுகிறது.

கல்லூரிகளின் பிரதிநிதிகள் இப்பயிற்சி விவரங்களை தங்கள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து அவா்களுக்கு தொழில்முனைவோராக உருவாவதற்கான வாய்ப்புகள் குறித்த தகவல் அளிக்க வேண்டும். அரசின் சாா்பில் இத்தகைய திட்டங்கள் மாணவா்களின் சிந்தனைகளை தூண்டி அவா்கள் சிறந்த தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.

கூட்டத்தில், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் ஸ்ரீதரன், வேலூா் மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளா் கோசல்ராம், மாவட்ட திட்ட மேலாளா் புவனா குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க

வாகன நெரிசல்: வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்

வேலூரில் காட்பாடி மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்லியம்மன் கோயில் எதிரே நிறுத்தாமல், புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் வகையில் புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் ... மேலும் பார்க்க