செய்திகள் :

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

post image

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2014-ம் ஆண்டு 5 மாணவிகள் மூணாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் மீது போலீஸார் 4 வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் தேவிகுளம் கோர்ட்டில் நடந்துவந்தன. அதில், 2 வழக்குகளில்  பேராசிரியரை கோர்ட் விடுவித்திருந்தது. மீதமுள்ள 2 வழக்குகளிலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது கோர்ட். அதேசமயம் பேராசிரியர் மேல்முறையீடு செய்ததை அடுத்து சிறைத்தண்டனை நிறைவேற்றப்படாமல் வழக்கு தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன்

இறுதியாக தொடுபுழா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் பேராசிரியரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற எம்.ஏ இரண்டாம் செமஸ்டர் தேர்வின்போது தேர்வு எழுதும் அறையில் 5 மாணவிகள் காப்பியடித்து தேர்வு எழுதியதை கண்டுபிடித்ததால் பேராசியர் ஆனந்த் விஸ்வநாதன் மீது பொய்யாக பாலியல் தொல்லை புகார் அளிக்கப்படிருப்பது தெளிவாகியுள்ளதாகவும் கோர்ட் தெரிவித்தது. பேராசிரியரை சிக்க வைப்பதற்காக கல்லூரி பிரின்ஸ்பல் உள்ளிட்டோர் துணை நின்றதாகவும் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் காப்பியடித்ததை கண்டுபிடித்த பேராசிரியர் மீது மாணவிகள் பொய் புகார் அளித்தது தெரியவந்தது. பேராசியர் ஆனந்த் விஸ்வநாதன் 11 ஆண்டுகள் மன உளைச்சலுடன் சட்டபோராட்டம் நடத்தி இறுதியாக வெற்றிபெற்றுள்ளார். சி.பி.எம் அமைப்பு வலுவாக இருந்த அந்த கல்லூரியில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த ஒரே பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் என்பதால் அவரை பழிவாங்கும் நோக்கில் மாணவிகளை சிலர் தூண்டிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்வு

இதுபற்றி பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் கூறுகையில், "2.9.2014 அன்று நடந்த தேர்வின்போது கடைசி நிமிடத்தில் எக்ஸாம் ஹாலுக்குள் சென்றபோது 5 மாணவிகள் காப்பியடித்ததை கண்டுபிடித்தேன். காப்பியடித்த மாணவிகள் குறித்து உடனே கல்லூரி முதல்வர் உள்ளிட்டோருக்கு ரிப்போர்ட் செய்தேன். கல்லூரி நிர்வாகம் அதை பல்கலை கழகத்துக்கு அனுப்பவில்லை என எனக்கு பின்னர் தெரியவந்தது. அதே மாதம் 14-ம் தேதி என் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததாக எனக்கு தெரியவந்தது. அந்த புகார் மூணாறு சி.பி.எம் அலுவலகத்தில் வைத்து எழுதப்பட்டதாக மாணவிகளே வாக்குமூலத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கின் ஆதி முதல், அந்தம் வரை முடிவுகளை எடுத்தது சி.பி.எம் கட்சிதான். எஸ்.எஃப்.ஐ அமைப்பு போன்றவை சேர்ந்து உருவாக்கிய நாடகம் இது. அனைவரும் திட்டமிட்டு எனக்கு எதிராக பாலியல் தொல்லை வழக்கை பதியவைத்தனர்" என்றார்.

2வது மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரம்; போதையில் குழந்தையைக் கொன்ற டெம்போ ஓட்டுநர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வ... மேலும் பார்க்க

`52 முறை துபாய் சென்று தங்கம் கடத்தல்' - நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அவர்மீது தற்போது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க

பெண்ணை எரித்துக் கொன்ற நபர்: லிவ்இன் உறவில் வாழ்ந்த பெண்ணை வேறு நபருடன் பார்த்ததால் வெறிச்செயல்!

பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ரோட்டில் வனஜாக்‌ஷி(25) என்ற பெண் தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே ... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை புகாரில் கைது: போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய ஆம் ஆத்மி கட்சி எல்.எல்.ஏ

பஞ்சாப் மாநிலம், சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் பதன்மஜ்ரா. இவர் மீது பெண் ஒருவர் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்புகாரில், `தனது மனைவிய... மேலும் பார்க்க

ஈரோடு: அமெரிக்காவின் வரியால் சலுகை விலையில் ஆடைகள்; விளம்பரத்தை நம்பி போனவர்களுக்கு என்ன நடந்தது?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருப்பது, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை நீ... மேலும் பார்க்க