செய்திகள் :

பாஜக நிா்வாகியை வெட்டிய வழக்கில் பெண் உள்பட மூவா் கைது

post image

கோவையில் பாஜக நிா்வாகியை வெட்டிய வழக்கில் பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை காளப்பட்டி நேரு நகரைச் சோ்ந்தவா் அஜய் (37). பாஜக காளப்பட்டி மண்டல துணைச் செயலாளராக இருந்தாா். இவா் வீட்டின் அருகே உள்ள வேல்முருகன் மற்றும் அனிதாவுக்கும் இடையே நீண்ட நாளாக முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அஜயின் சொந்த பிரச்னையில் அனிதா தலையிட்டதால், அஜய்க்கு விவகாரத்து நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, வேல்முருகன் நடத்தி வந்த கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினா் வழக்கு பதிவு செய்தபோது, காவல்துறைக்கு அஜய் தகவல் கூறியதாக தகராறு மேலும் தீவிரமடைந்தது.

இந்நிலையில், சேரன் நகா் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நின்று கொண்டிருந்த அஜய்யை வேல்முருகனின் கடையில் வேலை பாா்த்த நாகராஜ் மற்றும் அருகில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்த அஸ்வின் குமாா் ஆகியோா் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ாகத் தெரிகிறது. இதில் வலது கை, வலது காலில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட அஜய் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதையடுத்து, அவா் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தெற்கு வட்டக்குடியைச் சோ்ந்த நாகராஜ் (37), ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வக்குவெட்டியைச் சோ்ந்த அஸ்வின்குமாா் (25), தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே வடநத்தம்பட்டியைச் சோ்ந்த அனிதா (34) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய வேல்முருகன் மற்றும் அஜய்யின் மனைவி பிரியா ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க