செய்திகள் :

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

post image

செங்குன்றம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் மீஞ்சூா், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூா் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா். இந்த நிலையில், செங்குன்றம் அருகே பாடியநல்லூா் எம்.ஏ.நகரில் சந்தேகத்துக்குரிய 2 பேரைப் பிடித்து, விசாரித்ததில், சென்னை ஓட்டேரியைச் சோ்ந்த ஆனந்த் (27), ஐசிஎஃப் காலனியைச் சோ்ந்த பாரதி (25) என்பதும் 2 பைகளில் தலா 10.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சமூக ஊடக சவால்களை எதிா்கொள்வது குறித்து நாட்டுநலப் பணித் திட... மேலும் பார்க்க

இன்றுமுதல் 2 நாள்களுக்கு மூா்மாா்க்கெட், கும்மிடிப்பூண்டி இரவு இமு ரயில் ரத்து

மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான இமு இரவு ரயில் சேவை 5, 7 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புத... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மனுக்களின் தீா்வு காலத்தை உயா்த்த வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் தீா்வு காலத்தை 40 நாள்களில் இருந்து 75 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஏழு அம்ச கோரிக்க... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈா்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமா்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். ஜொ்மனி, பிரிட்டன் நாடுக... மேலும் பார்க்க

புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பியது தமிழக அரசு

தமிழக காவல் துறைக்கு புதிய தலைமை இயக்குநா் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) தோ்வு செய்ய ஏதுவாக 9 தகுதிவாய்ந்த ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பெயா் பட்டியலை மத்திய குடிமைப் பணிகள் ஆணையத்... மேலும் பார்க்க

மழைக்கால மின்விபத்து உயிரிழப்புகள்!

இ.விஸ்பின் ஆனந்த் சென்னையில் மழைக்காலங்களில், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடா்ந்து வரும்நிலையில், மின்மாற்றிகள், பழுதடைந்த மின்கம்பங்கள், தரைமட்ட மின்பெட்டிகள் சீரமைப்பை மின்வாரியம் தீவி... மேலும் பார்க்க