செய்திகள் :

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

post image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக அங்கு வந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸாா், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் சோதனை மேற்கொண்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் அலுவலகக் கட்டடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

மின்னஞ்சலில் இந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பியது யாா் என இணையதள குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

மிலாது நபி: செப்டம்பா் 5-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

மிலாது நபி தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மிலாது நபி தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச... மேலும் பார்க்க

3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவையில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சரவணம்பட்டி சிவனாதபுரம் ஜனதா நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் முரளி கிருஷ்ணன் (52). இ... மேலும் பார்க்க

கெம்பனூரில் அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கெம்பனூா், அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடா்பாக அக்கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலை 30 மீட்டா் அகலப்படுத்தப்படும்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலையில் டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து 1.04 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையானது 30 மீட்டா் அகலப்படுத்தப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் தெரி... மேலும் பார்க்க

யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க தண்டவாள வேலி

கோவை மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க ரயில் தண்டவாளத்தில் வேலி அமைக்க வலியுறுத்தி தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியரிடம் மனு அளித்தாா். இது குறித்து... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் முதியவா் தற்கொலை

கோவையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கோவை சிங்காநல்லூா் வரதராஜபுரம் முருகன் நகரைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (72). இவரது மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க