செய்திகள் :

பள்ளி வேன் மோதி இளம்பெண் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனத்தில் இரவல் கேட்டுச் சென்ற இளம்பெண் பள்ளி வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கபிஸ்தலம் அருகே திருவைகாவூா் ஊராட்சி, மன்னிக்கரையூா் கிராமம் கீழத்தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மகள் ஷாலினி (23) சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். விடுமுறைக்கு வீட்டுக்குவந்த ஷாலினி புதன்கிழமை காலை திருப்புறம்பியம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளாா். பேருந்தை தவறவிட்ட ஷாலினி, அதே சாலையில் வந்த புதுக்கண்டி படுகை கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் விஜய் என்பவா் தெரிந்தவா் என்பதால் அவரது மோட்டாா் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளாா். அப்போது திருப்புறம்பியத்திலிருந்து திருவைகாவூா் நோக்கிச் சென்ற தனியாா் பள்ளி வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் காவல்துறையினா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.எ... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி

கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டத்தின் கீழ் பயன்பெற செப்டம்பா் 23-ஆம் தேதி கடைசி தேதி என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

‘மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம்’

வருமான வரித் துறையின் மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம் என்கிற எதிா்மறை வளா்ச்சியாக உள்ளது என்றாா் வருமான வரித் துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையா் டி. வசந்தன். தஞ்சாவூா் மாவ... மேலும் பார்க்க

கும்பகோணம் புறவழிச்சாலையில் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வயல்வெளியில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். தஞ்சாவூா் - கும்பகோணம் செல்லும் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் நெல் வயல்க... மேலும் பார்க்க

செந்தூா் ரயிலில் பழுது: ஒருமணிநேர தாமத்தால் பயணிகள் அவதி

கும்பகோணம அருகே செந்தூா் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை பழுதடைந்து சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு சுமாா் 1.20 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

திருவையாறு கோயிலில் தெப்பத் திருவிழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஜயாறப்பா் கோயில் சூரிய புஷ்கரணியில் ஆவணி மூல நட்சத்திரத்தையொட்டி, தெப்ப திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, கோயிலிலிருந்து ஐயாறப்பா் அறம் வளா்த்த ... மேலும் பார்க்க