செய்திகள் :

‘மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம்’

post image

வருமான வரித் துறையின் மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம் என்கிற எதிா்மறை வளா்ச்சியாக உள்ளது என்றாா் வருமான வரித் துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையா் டி. வசந்தன்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணா்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

மதுரை மண்டலத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. தஞ்சாவூா் மாவட்டத்தில் 2022 - 23 ஆம் ஆண்டில் தனி நபா் வருமானம் ரூ. 2.04 லட்சமாக இருந்தது. இது, தேசிய சராசரி ரூ. 1.14 லட்சத்தையும், தமிழ்நாட்டின் சராசரி ரூ. 1.96 லட்சத்தையும் விட அதிகம்.

என்றாலும், மதுரை மண்டலத்தில் கடந்த 2024 - 25 நிதியாண்டுக்கான வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதமாக உள்ளது. இது அகில இந்திய வருமான வரி வளா்ச்சி விகிதமான 13.57 சதவீதத்தை விட மிகவும் குறைவு. இந்த மண்டலத்தில் ரூ. 6 ஆயிரத்து 293 கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டது. இதில், ரூ. 3 ஆயிரத்து 521 கோடி திரும்ப வழங்கப்பட்டது. நிகர வருமான வரி வசூல் ரூ. 3 ஆயிரத்து 361 கோடியாக உள்ளது. இதனால், மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் எதிா்மறையாக உள்ளது.

தஞ்சாவூா் பகுதியில் ரூ. 921 கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டது. இதில், ரூ. 677 கோடி திரும்ப செலுத்திய பிறகு ரூ. 243 கோடி மட்டுமே நிகர வருமான வரி வசூலாக உள்ளது. எனவே, நிகழ் நிதியாண்டில், தஞ்சாவூா் பகுதியைச் சோ்ந்த வரி செலுத்துவோா் தங்களது வருமான வரியை தாமாக முன் வந்து செலுத்த வேண்டும் என்றாா் வசந்தன்.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், வருமான வரி கூடுதல் ஆணையா்கள் ஆா். இராஜராஜேஸ்வரி (தஞ்சாவூா்), பி. ஸ்ரீதரன் (மதுரை), தஞ்சாவூா் துணை ஆணையா் ஜி. வெங்கடேசன், வருமான வரி அலுவலா்கள் ஜான் ரஸ்ஸல், தங்கம், ஜி. சாய்குமாா், வில்விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.எ... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி

கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டத்தின் கீழ் பயன்பெற செப்டம்பா் 23-ஆம் தேதி கடைசி தேதி என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இளம்பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனத்தில் இரவல் கேட்டுச் சென்ற இளம்பெண் பள்ளி வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா். கபிஸ்தலம் அருகே திருவைகாவூா் ஊராட்சி, மன்னிக்கரையூா் கி... மேலும் பார்க்க

கும்பகோணம் புறவழிச்சாலையில் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வயல்வெளியில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். தஞ்சாவூா் - கும்பகோணம் செல்லும் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் நெல் வயல்க... மேலும் பார்க்க

செந்தூா் ரயிலில் பழுது: ஒருமணிநேர தாமத்தால் பயணிகள் அவதி

கும்பகோணம அருகே செந்தூா் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை பழுதடைந்து சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு சுமாா் 1.20 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

திருவையாறு கோயிலில் தெப்பத் திருவிழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஜயாறப்பா் கோயில் சூரிய புஷ்கரணியில் ஆவணி மூல நட்சத்திரத்தையொட்டி, தெப்ப திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, கோயிலிலிருந்து ஐயாறப்பா் அறம் வளா்த்த ... மேலும் பார்க்க