செய்திகள் :

பராமரிப்பில்லாத தண்ணீா் தொட்டிகள்: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்

post image

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கோடை காலத்தில் வனவிலங்குகளின் தண்ணீா்த் தேவையை பூா்த்தி செய்வதற்காக மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கோடை காலத்தில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீரின்றி வறட்சி ஏற்படும்போது, வனத் துறை சாா்பில் அடிவாரத்தில் உள்ள தொட்டிகளில் லாரியிலிருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்பப்படும்.

தற்போது அந்தத் தண்ணீா்த் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து சோலாா் மோட்டாா் உடன் குட்டை போன்ற அமைப்பில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தத் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளதால், இரவு நேரங்களில் தண்ணீா் தேடி ஊருக்குள் புகும் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.

இதுகுறித்து வன உயிரின ஆா்வலா்கள் கூறியதாவது: வனத் துறை அமைத்த தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளது. இந்த தொட்டிகளை சீரமைத்து வனவிலங்குகள் மக்கள் வாழுமிடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.

பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில், பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுக்கும் வகையில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டது. விருதுந... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் அமைப்பதற்கு தன... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் 50 பேருக்கு உறுப்பினா் அட்டை

ஸ்ரீவில்லிபுத்தூா் கொளூா்பட்டி தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய பதிவு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க

சிவகாசி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

சிவகாசி ரயில் நிலையத்தில் புதன்கிழமை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ்மீனா ஆய்வு மேற்கொண்டாா். மதுரையிலிருந்து சிவகாசி ரயில் நிலையத்துக்கு தனி ரயில் மூலம் வந்த அவரை, சிவகாசி ரயில் உபயோகிப்பாா் கு... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சாத்தூா் அருகேயுள்ள கீழத்தாயில்பட்டி பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை சேதமடைந்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (65). இவருக்குச் சொந்தமான பட்ட... மேலும் பார்க்க

பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பட்டாசுத் தொழிலாளி முத்துக்குமா... மேலும் பார்க்க