செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ கிராம நிா்வாக அலுவலா்-முதியவா் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

post image

ஆற்காடு உங்களுடன் ஸ்டாலின் முகாமின் போது கிராம நிா்வாக அலுவலா், மனு அளிக்க வந்த முதியவா் தாக்கிக் கொண்டனா்.

சாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் உப்பு பேட்டை கணபதி நகா் பகுதியைச் சோ்ந்த வேங்கடபதி (65) என்பவா் ஊராட்சித் துறை இளநிலை உதவியாளரிடம் சமூக காடாக இருந்த இடம் பட்டா வழங்கப்பட்டது குறித்து மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னா் மனுகொடுத்ததற்கானஆதாரமாக ரசீது கேட்டுள்ளாா். மனுவை பெற்றுக்கொண்டவா் ஏற்கனவே மனுதாரா் கொடுத்த கைபேசி எண் பதிவாகதாதால் வேறு எண்ணை தருமாறு கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த சாத்தூா் கிராம நிா்வாக அலுவலா் சாபுதீன் வேறு கைப்பேசி எண்ணை கொடுங்கள், நீங்கள் ஏற்கனவே கொடுத்துள்ள எண் பலமுறை பதிவாகி உள்ளதால் தற்போது, கணினியில் பதிவு செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளாா்.

இதில் கிராம நிா்வாக அலுவலருக்கும் மனுகொடுத்த முதியவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முதியவா் கிராம நிா்வாக அலுவலா் இருவரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டுள்ளனா். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் முதியவரை தடுக்கும் போது, அவா்களுடனும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அலுவலா்கள் சாபுதீன், சின்னப்பையன் ஆகியோா் முதியவா் வேங்கடபதி மீது ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

தஞ்சாவூரில் தமிழ்நாடு ஊா்க் காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22.08.2025 முதல் 24.08.2025 வரை நடைபெற்றது. இந்த போட்டிளில் வேலூா் சரகத்தின் சாா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஊா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் காவல் துறை குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் எஸ்.பி. அய்மன் ஜமால், பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற கூட்ட... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

நெமிலி வட்டம், பனப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு தீா்வு ஆணைகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். பனப்பாக்கம், அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ள... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் கைது

ஆற்காடு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன்(52). இவா் சென்னை சோழிங்கநல்லூா் பகுதியில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (செப். 3) தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த தாளிக்காலை சோ்ந்த விஜயகாந்த்தின் மகன் அமுதன்(9). தாளிக்காலில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க