செய்திகள் :

மேடையில் சுருண்டு விழுந்து இறந்த சட்டசபை ஊழியர்; அரசு ஓணம் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

post image

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தின் வசந்தவிழா என்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தரப்பினரும் அத்தப்பூ கோலமிட்டு, ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில சட்டசபையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. சபாநாயகர் ஏ.என்.சம்சீர் ஓணம் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் ஊழியர்களுக்கிடையேயான போட்டி குழு நடனம் நடைபெற்றது. அதன்படி, பாடலுக்கு ஒரு குழுவினர் மேடையில் நடனம் ஆடினர். முன்வரிசையில் நடனமாடிக்கொண்டிருந்த சட்டசபை துணை நூலகர் ஜுனைஸ் அப்துல்லா(46) திடீரென சுருண்டு விழுந்தார். அவர், சாதாரணமாக விழுந்திருக்கலாம் எனக் கருதி சில ஊழியர்கள் தொடர்ந்து நடனமாடினர். ஆனால், அவர் சிறிது நேரம் ஆகியும் அசைவில்லாமல் கிடந்ததை அடுத்து ஊழியர்கள் அவரை தட்டி எழுப்ப முயன்றனர். ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் நின்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் ஜுனைஸ் அப்துல்லாவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நடனமாடியபோது ஜுனைஸ் அப்துல்லா சுருண்டு விழுந்த காட்சி

ஜுனைஸ் அப்துல்லா நடனமாடியபோது சுருண்டுவிழுந்து மரணமடையும் வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்தன. வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி பகுதியைச் சேர்ந்த  ஜுனைஸ் அப்துல்லா இதயம் சம்பந்தப்பட்ட நோய்க்காக கடந்த ஒரு மாதமாக மருந்து எடுத்து வந்துள்ளார். திருவனந்தபுரம் பி.எம்.ஜி ஜங்சன் அருகில் உள்ள அரசு குடியிருப்பில் ஜுனைஸ் அப்துல்லா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ஜுனைஸ் அப்துல்லாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சட்டசபை ஊழியர் ஜுனைஸ் அப்துல்லா

ஜுனைஸ் அப்துல்லாவின் உடல் சட்டசபை அலுவலக வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அவருக்கு ரஸீனா என்ற மனைவியும், நஜாத் அப்துல்லா, நிஹாத் அப்துல்லா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஜுனைஸ் அப்துல்லாவின் மறைவுக்கு சபாநாயகர் ஏ.என்.சம்சீர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஓணம் பண்கை கொண்டாட்டத்தின்போது சட்டசபை ஊழியர் ஒருவர் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்: மூளைச்சாவு அடைந்த சிறுமி; உறுப்பு தானம் செய்து 5 பேரின் உயிரைக் காத்த பெற்றோர்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரைச் சேர்ந்தவர்கள் ரவி, செல்வநாயகி தம்பதியினர். இவர்களுக்கு, தன்யா, ஓவியா (வயது 7) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் ஓசூர் பக... மேலும் பார்க்க

சென்னை: விஷப்பூச்சி கடித்து இளம் பெண் மரணம்? காவல்துறை சொல்வது என்ன?

சென்னையில் விஷப் பூச்சி கடித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சர்மிளா (19).கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29ம் தேதி) ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; குற்றாலம் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன். அரிசி வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி யமுனா மற்றும் மகன், மகள் ஆகியோருடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக நேற்று நள்... மேலும் பார்க்க

மும்பை: முதல் பிறந்தநாள், கேக் வெட்டிய சில மணி நேரத்தில் சோகம்; கட்டிடம் இடிந்து 14 பேர் உயிரிழப்பு

மும்பையில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. மும்பை அருகே உள்ள விராரில், விஜய் நகரில் இருக்கும் ரமாபாய் அபார்ட்மெண்ட் என்ற நான்கு மாடி கட்டிடம் நேற்று அதிகாலை த... மேலும் பார்க்க

சேலம்: வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு; பிடிக்க முற்பட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜமுருகன் (21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: திருட்டு பைக், பட்டா கத்தி... விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்!

திண்டுக்கல் நாகல் நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில் மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் வந்த வாகனத்தில் பட்டா கத்தி இருந்ததால... மேலும் பார்க்க