செய்திகள் :

திண்டுக்கல்: திருட்டு பைக், பட்டா கத்தி... விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்!

post image

திண்டுக்கல் நாகல் நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில் மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் வந்த வாகனத்தில் பட்டா கத்தி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் நகர் டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வண்டியில் இருந்த பட்டா கத்தி

பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததில் நிலை தடுமாறி பேருந்தின் முன்பக்கத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் காவல்துறையினர் விசாரணை செய்ததில் , விபத்தில் உயிரிழந்த நபர் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த பல்லாக்கு என்கின்ற ஜெயபிரகாஷ் என்பது தெரிய வந்துள்ளது. இவர் தேசிய நெடுஞ்சாலையில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மொபைல், செயின் பறிப்பது மற்றும் கஞ்சா விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்.

ஜெயபிரகாஷ்

ஏற்கனவே ஜெயபிரகாஷ் மீது ஒரு கொலை வழக்கும்,10 க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகளும் உள்ளது. இதற்காக வண்டியிலேயே பட்டா கத்தி ஒன்றையும் வைத்து கொண்டு சுற்றியிருக்கிறார். தற்போது ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் திருட்டு வாகனம் தான் என்பதையும் காவல்துறையினர் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய ராணுவ வீரர்; உடல் நலக்குறைவால் உயிரிழப்பு... விருதுநகரில் சோகம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, வீரஓவம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் சரண் (29) இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவ... மேலும் பார்க்க

கடலூர்: பள்ளி `ஷூ'வில் தஞ்சமடைந்த பாம்பு… கவனிக்காமல் அணிந்த 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொழுதூரைச் சேர்ந்த கண்ணன் – ராதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இளைய மகன் கௌசிக்குடன் தொழுதூரில் வசித்து வருகிறார் ராதா. கௌ... மேலும் பார்க்க

கடலூர்: அதிவேகம், பள்ளி பேருந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து; படுகாயங்களுடன் தப்பித்த குழந்தைகள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும் ஃபாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில், அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம்போல இன்று காலை அந்த மாணவர்களை வேனில... மேலும் பார்க்க

மும்பை: குண்டும் குழியுமான சாலையால் பலியான உயிர்; நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு; பின்னணி என்ன?

மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கின்றன. மும்பை அருகில் உள்ள பிவாண்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: வேப்பமுத்து சேகரிக்கச் சென்ற சகோதரிகள்; இடி தாக்கியதால் உயிரிழந்த சோகம்; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நூருல் அமீன்- கையர் நிஷா. இவர்களது மகள்களான செய்யது அஸ்மியாபானு மற்றும் சபிக்கா பானு ஆகிய இரண்டு பேரும் அ... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது" - மாநாட்டில் உயிரிழந்த ஊட்டி இளைஞர்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்... மேலும் பார்க்க