செய்திகள் :

ஓணம் பண்டிகை: விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு பறக்கும் பூக்கள்!

post image

கேரள மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, விவசாய அறுவடை மற்றும் குடும்ப ஒன்றிணைப்பை கொண்டாடும் முக்கிய திருவிழாவாக அமைந்துள்ளளது.

இதையொட்டி கோயம்புத்தூரில் இருந்து டன் கணக்கான பூக்கள் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கிறது. இதற்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே ஓணம் கொண்டாட்டம் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தொடங்கி விட்டது.

வெளிநாடுகளுக்கு அனுப்ப விமான நிலையம் வந்திருக்கும் பூக்களில் தங்க மஞ்சள் சாமந்தி, வெண் கிரிஸான்தமம், ஊதா வாடாமல்லி, வெள்ளை சம்பங்கி, துளசி, ரோஜா, மதுரை மல்லி உள்ளிட்ட பல்வேறு வகைப் பூங்கள் அடங்கும்.

இந்த பூக்கள் ஓணத்தின் முக்கிய பாரம்பரியமாக உள்ள பூக்கோலங்கள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து நேந்திரம் மற்றும் பல்வேறு பழங்களும் கேரளாவுக்கு அனுப்பப்படுவதால், ஓணம் பண்டிகை கலைக்கட்டி உள்ளது.

வழக்கமாக, ஓணம் பண்டிகையின்போது பல டன் மலர்களும் பழங்களும் தமிழகத்தின் ஒரு சில விமான நிலையங்களிலிருந்தும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் பல உலக நாடுகளுக்கும் ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொ... மேலும் பார்க்க

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:இன்று (02-09-2025) காலை 5.30 மண... மேலும் பார்க்க

ரூ. 98 கோடி ஒப்பந்த முறைகேடு: வழக்கில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்ப்பு!

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 98.25 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல... மேலும் பார்க்க

வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் கல் வீச்சு: 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயம்!

பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் உயிரிழந்த வடமாநில தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு சகத் தொழிலாளர்கள் காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர்.இதனால், காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீசியும், தடியட... மேலும் பார்க்க

பூம்புகார் அருகே கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

பூம்புகார் அருகே வானகிரி கிராமத்தில் சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை, அதிவேக திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கையில் கரு... மேலும் பார்க்க

கவலைப்பட வேண்டாம்; ஆசிரியர்களை அரசு கைவிடாது: அன்பில் மகேஸ்

ஆசிரியர் பணி குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆசிரியர்களை அரசு கைவிடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். அரசு மற்றும் அரசு உதவி பெ... மேலும் பார்க்க