செய்திகள் :

2-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

post image

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 2) காலை 80,520.09 புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 337.44 புள்ளிகள் அதிகரித்து 80,707.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 113.40 புள்ளிகள் உயர்ந்து 24,738.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரம் பங்குச்சந்தை இறக்கத்தைச் சந்தித்த நிலையில் இந்த வாரம் தொடர்ந்து 2-வது நாளாக ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பெரும்பாலான நிஃப்டி துறை குறியீடுகள் லாபத்தில் வர்த்தகமாகின்றன. ஊடகம், ரியல் எஸ்டேட் மற்றும் எரிசக்தி துறை பங்குகள் நல்ல லாபம் பெற்றுள்ளன.

சென்செக்ஸ் நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எடர்னல், என்டிபிசி, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

அதேநேரத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டிரென்ட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

இந்த வாரம் நடைபெறும் 2 நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஷாங்காய் மற்றும் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் சந்தைகள் இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன.

Stock Market Updates: Sensex gains 300 pts, Nifty near 24,700

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவா்த்தனை

புது தில்லி: இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது. இது குறித்து தேசிய பணப்பரிமாற்றக் க... மேலும் பார்க்க

8 மாதங்களில் தங்கம் பவுனுக்கு ரூ.20,240 உயா்வு: பவுன் ரூ.77,640-க்கு விற்பனையாகி புதிய உச்சம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.20,2... மேலும் பார்க்க

சுசுகி இந்தியா விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 9% அதிகரிப்பு!

புதுதில்லி: சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் மொத்த விற்பனையில் 9 சதவிகிதம் உயர்ந்து 1,13,936 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.நிறுவனம் ஆகஸ்ட் 2024ல் 1,04,800 வாகனங்களை விற்ற... மேலும் பார்க்க

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

புதுதில்லி: மாருதி சுசுகி இந்தியா தனது மின்சார வாகனமான இ-விட்டாராவின் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் கடந்த மாதம் 2,900 யூனிட்டுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்ததாக தெரிவித்தது.கு... மேலும் பார்க்க

குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்திய அதானி கிரீன் எனர்ஜி!

புது தில்லி: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) இன்று குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதன... மேலும் பார்க்க

வலுவான ஜிடிபி தரவுகளால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து நிறைவு!

மும்பை: தொடர்ந்து மூன்று நாட்கள் இழப்புகள் சந்தித்த நிலையில், வலுவான மேக்ரோ தரவுகளுக்குப் பிறகு, சென்செக்ஸில் இன்று ஐடி, ஆட்டோ மற்றும் வங்கி துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன.காலை நேர வர்த்தகத்தில் சென்... மேலும் பார்க்க