செய்திகள் :

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

post image

புதுதில்லி: மாருதி சுசுகி இந்தியா தனது மின்சார வாகனமான இ-விட்டாராவின் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் கடந்த மாதம் 2,900 யூனிட்டுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்ததாக தெரிவித்தது.

குஜராத்தின் பிபாவாவ் துறைமுகத்திலிருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட 12 ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த யூனிட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆகஸ்ட் 26 அன்று, குஜராத் தொழிற்சாலையிலிருந்து முதல் இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கார் உற்பத்தியானது ஹன்சல்பூர் ஆலையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது.

ஐரோப்பாவிற்கு இ-விட்டாரா ஏற்றுமதி தொடங்குவது உண்மையில் எங்களுக்கு ஒரு பெருமைமிக்க மற்றும் வரையறுக்கப்பட்ட தருணம் என்றார் மாருதி சுசுகி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஹிசாஷி டேகுச்சி.

இந்த மாடலை 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது, மேலும் உள்நாட்டு சந்தையிலும் விற்பனை செய்யப்படும் என்றார்.

ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசுகியின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 சதவிகிதம் அதிகரித்து 36,538 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 26,003 ஆக இருந்தது.

இதையும் படிக்க: குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்திய அதானி கிரீன் எனர்ஜி

Maruti Suzuki India said it has commenced shipment of its battery electric vehicle e VITARA, having dispatched over 2,900 units last month.

சுசுகி இந்தியா விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 9% அதிகரிப்பு!

புதுதில்லி: சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் மொத்த விற்பனையில் 9 சதவிகிதம் உயர்ந்து 1,13,936 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.நிறுவனம் ஆகஸ்ட் 2024ல் 1,04,800 வாகனங்களை விற்ற... மேலும் பார்க்க

குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்திய அதானி கிரீன் எனர்ஜி!

புது தில்லி: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) இன்று குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதன... மேலும் பார்க்க

வலுவான ஜிடிபி தரவுகளால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து நிறைவு!

மும்பை: தொடர்ந்து மூன்று நாட்கள் இழப்புகள் சந்தித்த நிலையில், வலுவான மேக்ரோ தரவுகளுக்குப் பிறகு, சென்செக்ஸில் இன்று ஐடி, ஆட்டோ மற்றும் வங்கி துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன.காலை நேர வர்த்தகத்தில் சென்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்குக் சரிந்து முடிவடைந்தது.இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமான நிலையில் வர்த்தகமான நிலையில், அம... மேலும் பார்க்க

ஃபிளிப்கார்டில் ஆப்பிள் ஐஃபோன் 16 விலையில் மாபெரும் தள்ளுபடி!

ஆப்பிள் ஐஃபோன் 17 வரிசைகள் அறிமுகம் ஆவதற்கான நாள்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஐஃபோன் 16 மாடல்களின் விலைகளில் மாபெரும் தள்ளுபடிகளை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.ஏற்கனவே ரூ.17 ஆயிரம் வரை அமேஸான் தள்ளு... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஐடி பங்குகள் விலை உயர்வு!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 1) காலை 79,828.99 என்ற புள்ளிகளில் தொடங... மேலும் பார்க்க