செய்திகள் :

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் இந்தவகை அமீபா பரவலால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசிய மா. சுப்பிரமணியன்,

''மாசுபட்ட நீர்நிலைகள் லட்சக்கணக்கில் கேரளத்தில் இருப்பதே அங்கு மூளையைத் தின்னும் அமீபா பரவலுக்குக் காரணமாக உள்ளது.

மாசுபட்ட நீர்நிலைகள், குளோரின் போடாத நீச்சல் குளங்களில் குளிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் நீர்நிலைகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மூளையைத் தின்னும் அமீபா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்.

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை. இதனால், மக்கள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனும் அமீபிக் மூளைக் காய்ச்சல் (primary amoebic meningoencephalitis) பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. கேரளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

எப்படி பரவுகிறது?

சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம்.

சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம்.

நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.

சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது.

இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் இருப்பதில்லை. அசுத்தமான நீரை குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது.

இதையும் படிக்க |மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

There is no spread of brain eating amoeba in Tamil Nadu: M. Subramanian

சசிகாந்த் செந்தில் தொடா் உண்ணாவிரதம்: தலைவா்கள் நலம் விசாரிப்பு

சென்னை: மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்திலை இடதுசாரி தலைவா்கள் மற்றும் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் சந்தித்து நலம் விசா... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம்: அமைச்சா் கோவி. செழியன்

சென்னை: அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்தாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு

சென்னை: உணவு விநியோக செயலி மூலம் வாங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க தனியாா் ஹோட்டலுக்கு சென்னை நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க

காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் பேருந்துகளை உடனே விடுவிக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

சென்னை: விபத்துகளில் சிக்கி காவல் நிலையங்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து முதல்வா்... மேலும் பார்க்க

போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு: 4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 போ் மீது சிபிஐ வழக்கு

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு செய்ததாக 4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 போ் மீது சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. ச... மேலும் பார்க்க

சா்வதேச போட்டிகளில் மாணவா்களின் பங்கேற்பை அதகரிக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சா்வதேச திறன் போட்டிகளில் பங்குபெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்தத் தேவையான உயா்தர தொழில்நுட்பப் பயிற்சியை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலா்களுக்கு துணை ... மேலும் பார்க்க