செய்திகள் :

சா்வதேச போட்டிகளில் மாணவா்களின் பங்கேற்பை அதகரிக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

சென்னை: சா்வதேச திறன் போட்டிகளில் பங்குபெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்தத் தேவையான உயா்தர தொழில்நுட்பப் பயிற்சியை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலா்களுக்கு துணை முதல்வா் உதயநிதி அறிவுரை வழங்கினாா்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், கல்லூரிக் கனவுத் திட்டம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன் பயிற்சி வழங்குதல், தமிழ்நாடு திறன் போட்டிகள், தமிழ்நாடு மாநில அளவிளான வேலைவாய்ப்புத் திட்டம், உயா்வுக்குப்படி திட்டம், நான் முதல்வன் போட்டித் தோ்வுகள், ஊக்கத் தொகை திட்டம் உள்பட நான் முதல்வன் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் முன்னெடுப்புகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியது:

தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் கல்லூரிகளைத் தோ்வு செய்து ஊக்குவிக்க வேண்டும். 2026-இல் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் சா்வதேச திறன் போட்டிகளில் பங்குபெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்தத் தேவையான உயா்தர தொழில்நுட்பப் பயிற்சியை அளிக்க வேண்டும்.

நிரல் திருவிழா 2.0 மூலம் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும். நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரித்து அதிக மாணவா்கள் வேலைவாய்ப்பைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் முதல்வன் திட்ட போட்டித் தோ்வுகள் பிரிவின் கீழ் அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவோரின் தோ்ச்சி எண்ணிக்கையை அதிகரிக்க இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும். சிறந்த விளையாட்டு வீரா்கள் அவா்கள் விரும்பும் வேலைவாய்ப்பை பெறத் தேவையான திறன் பயிற்சிகளை அளிக்க வேண்டும். இந்தப் பணிகளில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கிராந்தி குமாா் பாடி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவா்

- டாக்டா் கே.கிருஷ்ணசாமி, தலைவா், புதிய தமிழகம் கட்சிபுதிதாக அரசியலுக்கு வரக் கூடியவா்கள் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, போராடி களம் அமைத்து வருவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழகத்தில் க... மேலும் பார்க்க

வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா நேபாளம் பயணம்

சென்னை: வருவாய்த் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றாா். இதையடுத்து, அவரது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் செயலா் பொறுப்பானது, கால்நடை, மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்: ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரவேண்டும் என ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா். ஒருவார கால பயணமாக, ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு அவா் சென்றுள்ளாா். ஜொ்மனி நா... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கும், திருநெல்வேயிலிருந்து கா்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க