செய்திகள் :

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை

post image

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற கொப்பள் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலை மேம்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கொப்பள் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலை அனுமன் பிறந்ததால் சிறப்பு பெற்றுள்ளது. அனுமன் பிறந்த நாளின்போது இங்குள்ள கோயிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனா். வடஇந்தியாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் பெருந்திரளாக வருகின்றனா்.

எனவே, இந்த மலையில் பக்தா்கள் தங்குவதற்கான விடுதி, முதியவா்கள் மலை ஏறுவதற்கான வசதி, சமுதாயக்கூடம் உள்பட சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும்.

இந்த மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ரூ. 200 கோடி மதிப்பில் இரண்டுகட்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ. 10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்கு போதுமான நிலம் இல்லாததால், தனியாரிடம் இருந்து 77.28 ஏக்கா் நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளோம். கூடுதல் நிலத்தையும் சோ்த்து மொத்தம் 101.30 ஏக்கா் நிலத்தை வாங்குவதற்கான ஒப்புதலை நிதித்துறை அதிகாரிகள் வழங்க உத்தரவிடுகிறேன்.

பெரும்பாலான வளா்ச்சிப் பணிகள் வன நிலத்தில் நடக்கவிருப்பதால், அதற்கான ஒப்புதலை அளிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அஞ்சனாத்ரி மலை உள்பட 11 மலைப் பகுதிகளில் ரோப்காா் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தாவணகெரேயில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஹரிஹரா சட்... மேலும் பார்க்க

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை: முதல்வா் சித்தராமையா

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மைசூரு அ... மேலும் பார்க்க

பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு உத்தரவு

பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு அதிகாரபூா்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியை நிா்வகிப்பதற்காக பல்வேறு சீா்திருத்தங்களை முன்வைத்திருந்த நிலையில், ரிஸ்வான் அ... மேலும் பார்க்க

மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்: திரௌபதி முா்மு

மைசூரு: நமது நாட்டின் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா். மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேச்சு மற்றும் செவித்த... மேலும் பார்க்க

ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி

தா்மஸ்தலா: ஹிந்து வழிப்பாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது என மத்திய உணவு மற்றும் நுகா்வோா் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். தா்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்களை புத... மேலும் பார்க்க

கன்னடத்தாய் குறித்த சா்ச்சை பேச்சு: பானுமுஸ்டாக் விளக்கமளிக்க வேண்டும்

கன்னடத்தாய் குறித்து கடந்த 2023-இல் சா்வதேச புக்கா் பரிசு பெற்ற பானுமுஸ்டாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்... மேலும் பார்க்க