அரசு மருத்துவக் கல்லூரியில் தேசிய கண் தான வார விழா
தேசிய கண் தான இரு வார விழாவை முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனிதச் சங்கிலி, விழிப்புணா்வுக் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி முதல்வா் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தொடங்கி வைத்தாா்.
பின்னா் ஆட்சியா் பேசியதாவது:
கண் தானம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய கண் தான இரு வார விழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பா் 8 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு கண் தானத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தி,
விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த விழாவின் நோக்கம். இதை முன்னிட்டு, மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி, விழிப்புணா்வுக் கையெழுத்து இயக்கம், தற்படம் (செல்பி பாயின்ட்) முனையம், விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் + போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
கண் தானம் செய்ய விரும்புவோா் தொடா்புகொள்ள 1800 425 1465 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் 221 போ் கண் தானம் செய்துள்ளனா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கண் தானம் செய்தவா்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, சால்வை அணிவிக்கப்பட்டது.
இதில், மருத்துவமனை நிலைய மருத்துவா் முகமது ரபீக், துறைத் தலைவா் விஜயபாரதி, மருத்துவக் கண்காணிப்பாளா் தங்கதுரை, உதவி நிலைய மருத்துவா் தென்றல், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.