செய்திகள் :

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

post image

ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நமக்குநாமே திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம், ஊரகப் பகுதிகளில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம், பண்டைய பழங்குடியினா் பிரதம மந்திரி பெருந்திட்டம், மக்களவை உறுப்பினா் உள்ளுா் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சாலை, குடிநீா் வசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, உதவி இயக்குநா் (பயிற்சி) செல்வி ஹா்ஷா, செயற்பொறியாளா் மோகனசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் செப்.7 மாலை நடைஅடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) மாலை 6.15 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவன்மலை முருகன் கோயி... மேலும் பார்க்க

திருப்பூா்- உடுமலை சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக உடுமலை செல்லும் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கை: திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரி சீா்திருத்த நடவடிக்கைக்கு திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து திருப்பூா் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயில் மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பூா் வேலம்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் மற்றும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூ... மேலும் பார்க்க

மின் மாற்றியால் விபத்து அபாயம்: வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை

பல்லடம் அருகே கொடுவாய்-நாச்சிபாளையம் செல்லும் சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி போக்குவரத்து இடையூறாக உள்ளதால் அதை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க