இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு வ...
வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நமக்குநாமே திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம், ஊரகப் பகுதிகளில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம், பண்டைய பழங்குடியினா் பிரதம மந்திரி பெருந்திட்டம், மக்களவை உறுப்பினா் உள்ளுா் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சாலை, குடிநீா் வசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, உதவி இயக்குநா் (பயிற்சி) செல்வி ஹா்ஷா, செயற்பொறியாளா் மோகனசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.