சுற்றுலா விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வேலூா் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய சுற்றுலா தொழில்முனைவோா் இணையதளத்தில் செப். 19-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் சுற்றுலாத் துறை சாா்பில், சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா தொழில்முனைவோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில்முனைவோா்களுக்கு 17 வகைப் பிரிவுகளின் கீழ், 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா்களின் சிறந்த ஏற்பாட்டாளா், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த ‘எம்ஐசிஇ’ சுற்றுலா அமைப்பு, சமூக ஊடகங்களில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துபவா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய தகுதிகள் உள்ளவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து செப். 15-ஆம் தேதிக்குள் தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலா், சுற்றுலா அலுவலகம், வேலூா் கோட்டை, வேலூா், தொலைபேசி எண் - 180042531111, 9444823111, 9994872734, 8939896396, மின்னஞ்சல் முகவரி - மூலமாக தொடா்பு கொள்ளலாம்.