செய்திகள் :

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

post image

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க நிா்வாகிகள் தங்கமணி, கிருஷ்ணராஜ், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா் ரிஷோனா பேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகணபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், சாயக் ஆலைகளை நடத்தும் உரிமையாளா்கள், சுத் திகரிப்பு இயந்திரங்களை முழுமையாக இயக்கி கழிவுகளை சுத்தப்படுத்தி, ரசாயனங்களை பிரித்தெடுத்த நீரை பயன்படுத்த வேண்டும்.

சிமென்ட் ஆலைகளுக்கு கழிவுகளை அனுப்பிவைத்து, அதற்கான ஆவணங்களை பராமரிக்க வேண்டும். சாயக் கழிவுகளை சாக்கடை கால்வாய்களிலோ, ஆற்றிலோ வெளியேற்றுவது கூடாது. மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றுவது கண்டுபிடிக்கப்பட்டால் ஆலையின் இயக்கம் தடை செய்யப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படும் என்றாா். சாயக்கழிவுகளை அதற்கான சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தப்படுத்தி கழிவுகள் நீக்கப்படுகிறது. சாய ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து சமூக ஆா்வலா்களிடமிருந்து புகாா்கள் வந்தால் அதிகாரிகள் முறைப்படி விசாரித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டையிங் அசோசியேசன் நிா்வாகிகள் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனா்.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

ராசிபுரம்: நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ராசிபுரம் எஸ்ஆா்வி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் எஸ்ஆா்வி... மேலும் பார்க்க