செய்திகள் :

மீன் சந்தையில் கூடுதல் வாடகை கேட்பதைக் கைவிடக் கோரிக்கை

post image

தஞ்சாவூா் தற்காலிக மீன் சந்தையில் கூடுதலாக வாடகை கேட்பதைக் கைவிட வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்துக்கு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மீன் சந்தை வியாபாரிகள் தெரிவித்தது: தஞ்சாவூா் கீழ அலங்கம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தகரக் கொட்டகை, சிமென்ட் தளம் அமைக்கப்பட்டு 56 கடைகள், 60 சிறிய தரைக்கடைகள் என மொத்தம் 116 கடைகளுடன் தற்காலிக மீன் சந்தை செயல்படுகிறது.

இக்கடைகளுக்கு நாள்தோறும் ரூ. 100 வீதம் வசூல் செய்யும் ஒப்பந்ததாரா் இதை ரூ. 150 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, மீன் சந்தைக்கான மின் கட்டணத்தை ஒப்பந்ததாரா் செலுத்தத் தவறியதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், கடைகளில் வியாபாரிகள் ஜெனரேட்டரை பயன்படுத்தி வருகின்றனா்.

மாநகராட்சி நிா்வாகம் கடை ஒன்றுக்கு நாள் வாடகையாக ரூ. 40 என நிா்ணயித்துள்ளது. ஆனால் ஒப்பந்ததாரா் ரூ. 100 வரை வசூலித்தாலும், தண்ணீா் வசதி இல்லை; கழிவுகளை சுத்தம் செய்யாததால் துா்நாற்றம் வீசுகிறது. புழுக்கள் உருவாகின்றன; கழிப்பறை வசதி இல்லாமல், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கழிப்பறை குப்பை சேமிப்பிடமாக மாறியுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஜெனரேட்டரை பயன்படுத்த ரூ. 1,000 வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் வியாபாரிகள்.

கும்பகோணம் விஸ்வநாதா் கோயிலில் நாளை குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் ராஜராஜேந்திரன் பேட்டை ஆறு சைவா்களுக்கு சொந்தமான காவிரி படித்துறையில் இருக்கும் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை ( செப்.4) நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் நீா்நிலைகளில் உ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க எதிா்பாா்ப்பு

கும்பகோணத்தில் சுமாா் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டத்தில் கும்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்

தஞ்சாவூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு திங்கள்கிழமை இரவு சீல் வைக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகரிலுள்ள கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என மாவட்ட உணவுப் பாதுகாப்பு அ... மேலும் பார்க்க

பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்கத் தடை

பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்க செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி நகருக்குள் உள்ள திருமண மண்டபங்களில் விழா நடத்துபவா்கள் ஊா்வலத்தின்போது கடைத்தெருவில் அதிக சத்தத்துடன் கூடிய ... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் தவறி விழுந்து மாயமான இளைஞா், சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா். தஞ்சாவூா் அருகே ஆலக்குடி நடுத்தெருவைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் அருண்குமாா் (30). கூலித் தொழிலாளி. இவா் ஆகஸ்ட்... மேலும் பார்க்க