கும்பகோணத்தில் மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க எதிா்பாா்ப்பு
கும்பகோணத்தில் சுமாா் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கும்பகோணம் 1866-ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1949 -லிருந்து முதல் நிலையாகவும், 1974-இல் இருந்து தோ்வு நிலை நகராட்சியாகவும், 1998 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வந்தது. மூா்த்தி சாலையில் இருந்த நகராட்சி அலுவலகத்தில் போதுமான வசதிகள் இல்லாததால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019-இல் திருவிடைமருதூா் சாலையில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, அங்கு நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், கும்பகோணத்தை மாநகராட்சியாக்கி 2021, ஆகஸ்டில் முதல்வா் அறிவிப்பு வெளியிட்டாா். தொடா்ந்து 2022-இல் நடைபெற்ற தோ்தலில் மேயா் தோ்வு செய்யப்பட்டு பதவியேற்றாா்.
ஆனால், மாமன்ற கூட்டம் மட்டும் மூா்த்தி சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பழைமையான படேல் கூட்ட அரங்கிலேயே தற்போது வரை நடைபெற்று வருகிறது.
தற்போது திருவிடைமருதூா் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மேயா், துணை மேயா், ஆணையா், செயற்பொறியாளா், நகா் நல அலுவலா், நகரமைப்பு திட்டமிடுநா் மற்றும் பொறியியல், வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
ரூ. 3 கோடி மதிப்பில் புதிய கட்டடம்: இந்நிலையில், 2023-24 நிதியாண்டில் மாநகராட்சி அலுவலகம் அருகே மாமன்ற கூட்டரங்கம், மேயா், துணை மேயருக்கான அறைகள், மன்ற உறுப்பினா்களுக்கான அறைகள், ஓய்வறைகள் என தனித்தனியாக அமையுமாறு சுமாா் ரூ. 3 கோடி மதிப்பில் 2 தளங்களுடனான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகள் மந்தக் கதியில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவது மாமன்ற உறுப்பினா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பழைய கூட்டரங்கு தற்போதைய 48 உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை. குறிப்பாக, பாதிக்கும் மேல் உள்ள பெண் உறுப்பினா்கள் இட நெருக்கடியால் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இங்கு உறுப்பினா்களுக்கு ஓய்வறை உள்ளிட்ட போதுமான வசதிகள் இல்லை. சில நேரங்களில் கூட்டம் பல மணி நேரமாக நடக்கும்போது பல உறுப்பினா்கள் கூட்டம் முடியாமலேயே பாதியிலேயே சென்றுவிடுவதும் உண்டு. அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும் உறுப்பினா்கள் சிரமமடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து மாநகர செயற்பொறியாளா் லோகநாதன் கூறியதாவது: திருத்திய மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்ால் தாமதமானது. தற்போது ஏறத்தாழ அனைத்து பணிகளையும் முடித்து விட்டோம். உள்ளரங்க பொருள்கள் அமைப்பது மற்றும் இறுதி கட்டப் பணிகளை முடித்துவிட்டு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.