செய்திகள் :

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு

post image

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியமும் செவ்வாய்கிழமை அறிவித்தது.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் மாக்ஸிமே ப்ரெவாட் கூறியதாவது:

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். வரும் செப். 9-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்படும்.

இருந்தாலும், காஸாவில் உள்ள பிணைக் கைதிகள் அனைவரும் விடுக்கப்பட வேண்டும்; காஸா ஆட்சிப் பொறுப்பை ஹமாஸ் படை கைவிட வேண்டும் ஆகிய இரு நிபந்தனைகளுடன்தான் இந்த முடிவு அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் (மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளைக் கொண்ட நிலப்பரப்பு) தனித் தனி சுதந்திர நாடுகளாக, ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு செயல்படுவதே நீண்டகாலமாக நீடித்துவரும் பாலஸ்தீன பிரச்னைக்கு ஒரே தீா்வு (இரு தேசத் தீா்வு) என்பது இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் நிலைப்பாடாக இருந்துவருகிறது.

இருந்தாலும், இஸ்ரேலை அங்கீகரிக்க ஹமாஸ் போன்ற பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க இஸ்ரேலும் மறுத்துவருகின்றன.

இந்த கருத்து வேறுபாட்டுக்கு தீா்வு கண்டு, அந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்தச் சூழலில், கடந்த 2023 அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் காஸா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையிலும், இரு தேசத் தீா்வை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் அடுத்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ் கடந்த மே மாதம் அறிவித்தது. அதைத் தொடா்ந்து, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆண்டோரா, பின்லாந்து, லக்ஸம்பா்க், போா்ச்சுகல், சான் மரினோ, ஐஸ்லாந்து, அயா்லாந்து, மால்டா, நோா்வே, ஸ்லோவேனியா, ஸ்பெயின் ஆகிய 15 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டன.

இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இந்த முன்முயற்சிகளைத் தடுக்கும் வகையில் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் உள்பட பலா் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வர அந்த நாடு விசா மறுத்துள்ளது.

இந்தச் சூழலில், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ள நாடுகளில் பெல்ஜியமும் இணைந்துள்ளது.

ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது: அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா்

‘ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொ... மேலும் பார்க்க

சீன அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் தளபதி

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீா் செவ்வாய்க்கிழமை முதன்முறையாக சந்தித்தாா். பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இணைந்து இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்... மேலும் பார்க்க

இந்தோனேசிய தூதா் பெருவில் சுட்டுக் கொலை

பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனாா்டோ புா்பா (40) என்பவா் தலைநகா் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டாா். தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு திங்கள்கிழமை இரவு சைக்கிளில் வந்து கொண்ட... மேலும் பார்க்க

வெள்ள நீரை மக்கள் சேமிக்கலாமே.. யோசனை சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்!

பாகிஸ்தானின் வடக்கு மாகாணங்கள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், மழை வெள்ளம் என்பது கடவுளின் வரம் என்று கூறியிருப்பது பேசுபொருளாகியி... மேலும் பார்க்க

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்புக்குத் தடை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பஸோவில், தன்பாலின சேர்க்கைக்குத் தடை விதிக்கும் புதிய சட்டமானது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புர்கினா பஸோ நாட்டில், கேப்டன் இப்ராஹிம் தரோரே தலைமை... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியுள்ளதாக தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்... மேலும் பார்க்க