செய்திகள் :

பாகிஸ்தானுடன் தொடா்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

post image

ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்களை கடத்தி வந்த 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஹிராநகா் செக்டாரில் உள்ள சான் தண்டா கிராமத்தில் சா்வதேச எல்லையொட்டி எல்லைப் பாதுகாப்புப் படையுடன் (பிஎஸ்எஃப்) இணைந்து ஜம்மு-காஷ்மீா் காவல் துறை கடந்த ஜூலை 29-ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையில், ட்ரோன் மூலம் வீசப்பட்ட சுமாா் அரை கிலோ போதைப்பொருள் பொட்டலங்கள் மீட்கப்பட்டன.

இதையடுத்து, இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய சுக்விந்தா் சிங், அா்ஷதீப் சிங் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் இருவரும் சம்பா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டத்தில் பணிபுரிந்து வருபவா்கள் ஆவா். இவா்களிடம் இருந்து மேலும் 411 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட கதுவா மாவட்டத்தைச் சோ்ந்த ஃபெரோஸ் தின் எனும் அல்லு என்பவரை காவல்துறையினா் தொடா்ந்து கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் விசாரணை மேற்கொண்டதில், இந்தக் கும்பலின் நிதி பா்வா்த்தனைகளுக்குப் பொறுப்பான பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா். இவா் பாகிஸ்தான் கடத்தல்காரருடன் நேரடியாக தொடா்பு வைத்திருந்ததுடன், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோத வழிகளில் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளாா் என்பதும் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக கதுவா மாவட்ட காவல்துறை மூத்த கண்காணிப்பாளா் சோபித் சக்சேனா கூறுகையில், ‘கைது செய்யப்பட்டவா்கள் மிகவும் மோசமான குற்றவாளிகள். அவா்கள் ஏற்கெனவே 30 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் கடத்தியுள்ளனா். இந்த வழக்கில் விசாரணை தொடா்கிறது. மேலும் பலா் கைது செய்யப்படலாம்’ என்றாா்.

இதேபோல், கதுவா மாவட்டத்தில் மற்றொரு வழக்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினா் கைது செய்தனா். ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க