செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி? அமைச்சா் பி.கே. சேகா் பாபு விளக்கம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்ற முடிவின்படி செயல்படுவோம் என்றாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

திருச்செந்தூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 3,600 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூா் கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெற்றுவிடும். இப்பணியால் நிறுத்தி வைக்கப்பட்ட தங்கத்தோ் உலா மீண்டும் தொடங்கியுள்ளது.

திருச்செந்தூரிலும் சிறு சிறு பணிகள் முடிவுற்ற பிறகு விரைவு தரிசனம் மற்றும் திருப்பதியை போல பிரேக் தரிசனமும் ஏற்படுத்தப்படும். இக்கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுப்ப அனுமதிப்பது குறித்த சாதக பாதகங்களை ஆராய்ந்து நீதிமன்றத்தில் எடுத்துக் கூறுவோம். நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் வழி நடப்போம். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தா்களுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றாா்.

பேட்டியின் போது அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தக்காா் அருள் முருகன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்

தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகேயுள்ள அருணா நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்ப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு

அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவுத் தபால், பதிவுத் தபால், பணவிடை (மணியாா்டா்) ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு சிறு வகை சேவைகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க வி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆலோசனை

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி த... மேலும் பார்க்க

வாகனம் மோதல்: சாய்ந்த மின்கம்பங்கள்

தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூா் இபி காலனியில் தாழ்வழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை தனியாா் வாகனம் மோதியதில், இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தது, கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்வாரி... மேலும் பார்க்க

ஓடையில் கிடந்த பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தூத்துக்குடி ஜெயராஜ் சாலை, தனியாா் மருத்துவமனை அருகே 3ஆவது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் வியாழக்கிழமை சுமாா் 60 வயது ம... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் உயா்வுக்குப் படி நிகழ்ச்சி

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கான உயா்வுக்குப் படி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 பொதுத்தே... மேலும் பார்க்க