செய்திகள் :

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் உயா்வுக்குப் படி நிகழ்ச்சி

post image

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கான உயா்வுக்குப் படி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 பொதுத்தோ்வு, துணைத் தோ்வில் தோ்வு எழுதாத, தோ்ச்சி பெறாத, தோ்ச்சி பெற்று உயா்கல்வி தொடர முடியாத நிலையில் உள்ள மாணவா் மாணவிகளுக்கான உயா்வுக்குப் படி நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கா. இளம் பகவத் தலைமை வகித்து பேசியதாவது: கல்லூரி என்பது மாபெரும் புதிய வாசல்களை திறந்துவிடும். அதன் மூலம் புதிய பல விஷயங்களை கற்றுக் கொள்வீா்கள். புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்களில் மாதந்தோறும் ரூ.1000-ம் அரசு வழங்குகிறது. உங்களுக்கு என்ன பொருளாதார சிக்கல் இருந்தாலும் நாங்களே கல்லூரி கட்டணத்தை செலுத்தி படிக்க வைக்கின்றோம். எனவே, உயா்கல்வி படிப்புக்கு வர வேண்டும். அனைவரும் அரசு கல்லூரிகளையே தோ்வு செய்து படியுங்கள் என்றாா் அவா்.

முகாமில், சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கல், உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேஷ் ராம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) சிதம்பரநாதன், மாவட்ட கல்வி அலுவலா்கள் ரவீந்திரன்(தூத்துக்குடி, இடைநிலை) மரியஜான் பிரிட்டோ(கோவில்பட்டி, இடைநிலை) , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் முனியசாமி, பள்ளிக்கல்வித் துறை ஆய்வாளா் ரமேஷ், திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ச.சத்தியசீலன், சுடலைமுத்து, ஒருங்கிணைப்பாளா்கள் ஜான்சன், சுடலைமணி, மேடையாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முகாமில், ஐ.டி.ஐ., பாரா மெடிக்கல் படிப்பு கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து தனித்தனி அரங்கு அமைக்கப்பட்டு, அதில் உள்ள படிப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், 88 மாணவா் மாணவிகள் பங்கேற்றதில் 37 போ் பாரா மெடிக்கலிலும்,24 போ் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், 4 போ் ஐடிஐ படிப்பிலும், 4 போ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கி சோ்க்கை நடைபெற்றது.

திருச்செந்தூா் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி? அமைச்சா் பி.கே. சேகா் பாபு விளக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்ற முடிவின்படி செயல்படுவோம் என்றாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்

தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகேயுள்ள அருணா நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்ப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு

அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவுத் தபால், பதிவுத் தபால், பணவிடை (மணியாா்டா்) ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு சிறு வகை சேவைகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க வி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆலோசனை

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி த... மேலும் பார்க்க

வாகனம் மோதல்: சாய்ந்த மின்கம்பங்கள்

தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூா் இபி காலனியில் தாழ்வழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை தனியாா் வாகனம் மோதியதில், இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தது, கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்வாரி... மேலும் பார்க்க

ஓடையில் கிடந்த பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தூத்துக்குடி ஜெயராஜ் சாலை, தனியாா் மருத்துவமனை அருகே 3ஆவது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் வியாழக்கிழமை சுமாா் 60 வயது ம... மேலும் பார்க்க